விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்திற்கான காரணத்தை இலங்கை, இந்திய அரசுகளுடன் பொருத்திப் பார்ப்பது சரியல்ல. தன்வினை தன்னைச் சுட...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்திற்கான காரணத்தை இலங்கை, இந்திய அரசுகளுடன் பொருத்திப் பார்ப்பது சரியல்ல.
தன்வினை தன்னைச் சுடும் என்பதே காரணம் என தெரிவித்துள்ளார் கடற்றொழில், நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
இன்று யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவுடன் இணந்து, புலிகளை அழித்தது சரியென சம்பந்தன் சொன்ன கருத்து தொடர்பாக நேற்று வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார். அது அவருடைய கருத்து. ஒருவர் கொலை செய்யப்படுவதன் ஊடாக எமது பிரச்சனைகளிற்கு தீர்வு காணப்பட முடியாது. மனிதப் படுகொலைகள், மனித இறப்புக்களில் நாங்கள் சந்தோசப்படுபவர்கள் அல்ல. அதற்கு ஊடாக பிரச்சனைகளிற்கு தீர்வு காண முடியாது.
பிரபாகரனின் இறப்பு அவரைச் சார்ந்தது. தன் வினை தன்னைச்சுடும். ஓட்டப்பம் வீட்டைச்சுடும். அவரது இறப்பை இலங்கை, இந்திய அரசுகளுடன் பொருத்திப் பார்ப்பது சரியானது அல்ல. ஒரு தலைமையென்பது, அது தன்னையும் பாதுகாத்து, தன்னுடனுள்ள மக்களையும் பாதுகாக்க வேண்டும். அதுதான் சரியான தலைமையாக இருக்கும் என்றார்.
தன்வினை தன்னைச் சுடும் என்பதே காரணம் என தெரிவித்துள்ளார் கடற்றொழில், நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
இன்று யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவுடன் இணந்து, புலிகளை அழித்தது சரியென சம்பந்தன் சொன்ன கருத்து தொடர்பாக நேற்று வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார். அது அவருடைய கருத்து. ஒருவர் கொலை செய்யப்படுவதன் ஊடாக எமது பிரச்சனைகளிற்கு தீர்வு காணப்பட முடியாது. மனிதப் படுகொலைகள், மனித இறப்புக்களில் நாங்கள் சந்தோசப்படுபவர்கள் அல்ல. அதற்கு ஊடாக பிரச்சனைகளிற்கு தீர்வு காண முடியாது.
பிரபாகரனின் இறப்பு அவரைச் சார்ந்தது. தன் வினை தன்னைச்சுடும். ஓட்டப்பம் வீட்டைச்சுடும். அவரது இறப்பை இலங்கை, இந்திய அரசுகளுடன் பொருத்திப் பார்ப்பது சரியானது அல்ல. ஒரு தலைமையென்பது, அது தன்னையும் பாதுகாத்து, தன்னுடனுள்ள மக்களையும் பாதுகாக்க வேண்டும். அதுதான் சரியான தலைமையாக இருக்கும் என்றார்.