பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்களைக் கொண்ட வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் 3 உறுப்பினர்களுக்கும் இடையே இன்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. வழக்கம் போல், வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்களை வழங்குவது தேர்தல் பரப்புரையின் தொடக்கமாக கருதப்படுகிறது. அத்துடன், பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணையக்குழுவுக்கும் இடையே இன்று பிற்பகல் சந்திப்பு நடைபெற்றது. இதேவேளை, ஜூன் 20ஆம் திகதியன்று பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு எடுத்த முடிவுக்கு எதிராக அனைத்து அடிப்படை உரிமை மனுக்களையும் தள்ளுபடி செய்யக் கோரி அனைத்து இலங்கை மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் இந்திகா சம்பத் மெரண்டிகே இன்று உயர் நீதிமன்றத்தில் இடைபுகு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் 3 உறுப்பினர்களுக்கும் இடையே இன்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
வழக்கம் போல், வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்களை வழங்குவது தேர்தல் பரப்புரையின் தொடக்கமாக கருதப்படுகிறது.
அத்துடன், பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணையக்குழுவுக்கும் இடையே இன்று பிற்பகல் சந்திப்பு நடைபெற்றது.
இதேவேளை, ஜூன் 20ஆம் திகதியன்று பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு எடுத்த முடிவுக்கு எதிராக அனைத்து அடிப்படை உரிமை மனுக்களையும் தள்ளுபடி செய்யக் கோரி அனைத்து இலங்கை மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் இந்திகா சம்பத் மெரண்டிகே இன்று உயர் நீதிமன்றத்தில் இடைபுகு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.