மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சில கிராமங்களில், மக்கள் பெருமளவான தோட்டச் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த தோட...
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சில கிராமங்களில், மக்கள் பெருமளவான தோட்டச் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த தோட்டச் செய்கையுடன் 'சுண்டைக்காய்' (திப்பட்டு) என்று அழைக்கப்படுகின்ற ஒரு மரக்கறி பயிர் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார், ஈச்சலவக்கை, பெரியமடு ஆகிய கிராமங்களில், சுமார் நூறு ஏக்கர் நிலப்பரப்பில், இந்தப் பயிர்ச்செய்கை பாரியளவில் முன்னெடுக்கப்படுகின்றது.
சுண்டைக்காயை வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் விரும்பி உண்பது இல்லை. ஆனால், தென் பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. தென்பகுதி மக்களிடம் மிகவும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவற்றை ஆய்ந்து ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் காணப்படுகின்றன.
சுண்டைக்காயைப் பயிரிட்ட தோட்டச் செய்கையாளர்களின் நிலை கவலையளிக்கின்றது.
அந்த தோட்டச் செய்கையுடன் 'சுண்டைக்காய்' (திப்பட்டு) என்று அழைக்கப்படுகின்ற ஒரு மரக்கறி பயிர் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார், ஈச்சலவக்கை, பெரியமடு ஆகிய கிராமங்களில், சுமார் நூறு ஏக்கர் நிலப்பரப்பில், இந்தப் பயிர்ச்செய்கை பாரியளவில் முன்னெடுக்கப்படுகின்றது.
சுண்டைக்காயை வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் விரும்பி உண்பது இல்லை. ஆனால், தென் பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. தென்பகுதி மக்களிடம் மிகவும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவற்றை ஆய்ந்து ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் காணப்படுகின்றன.
சுண்டைக்காயைப் பயிரிட்ட தோட்டச் செய்கையாளர்களின் நிலை கவலையளிக்கின்றது.