தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியவின் மேற்பார்வையில் வாக்களிக்கும் ஒத்திகை நாளை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அம்பலங்கொட வில...
தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியவின் மேற்பார்வையில் வாக்களிக்கும் ஒத்திகை நாளை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அம்பலங்கொட விலேகொட தம்மாயுக்திகராம கோயிலில் நடைபெறும்.
தேவையான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவை நடத்தும்போது தோன்றக்கூடிய பிரச்சினைகளை அடையாளம் காணும் வகையில் இது நடத்தப்படுகிறது. சுமார் 200 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இந்த செயற்பாட்டில் பங்கேற்பார்கள்.