யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு படையின் தீயணைப்பு வாகனம் விபத்துக்குள்ளாகி முற்றாக சேதமடைந்துள்ளதால் தமது சபைக்கு அவசர தேவையாகவுள்ள...
யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு படையின் தீயணைப்பு வாகனம் விபத்துக்குள்ளாகி முற்றாக சேதமடைந்துள்ளதால் தமது சபைக்கு அவசர தேவையாகவுள்ள தீயணைப்பு வாகனத்தை பெற்றுத்தருமாறு இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு யாழ் மாநரக சபை பதில் முதல்வர் து.ஈசன் கடிதம் மூலம் கோரியுள்ளார்.
அக்கோரிக்கைக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 16 ஆம் திகதி கடமையின் நிமித்தம் அவசரகால சூழ்நிலைக்கு செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளாகி ஒரு தீயணைப்பு வீரர் பலியானதுடன் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது வருத்தப்பட வேண்டிய விடயம். இதனால் எமது தீயணைப்பு வாகனம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இதனால் தீயணைப்பு சேவையை வழங்குவதற்கு எங்களுக்கு மாற்று வசதி இல்லை என்பதால் யாழ்ப்பாண மாநகர சபைக்கு அவசரமாக ஒரு தீயணைப்பு வாகனத்தை பெறுவதற்கு தங்களிடம் கோரியுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.