பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் இன்று இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்ப...
பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் இன்று இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கான விசேட கூட்டம் இன்று பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பது தொடர்பிலான ஆலோசனைகள் சுகாதார அமைச்சிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.