பிரதமர் மற்றும் துறைமுக தொழிற்சங்கத்திற்கு இடையில் இன்று காலை தங்காலை கால்டன் வீட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சீனாவில் இருந்து இலங்கைக்...
பிரதமர் மற்றும் துறைமுக தொழிற்சங்கத்திற்கு இடையில் இன்று காலை தங்காலை கால்டன் வீட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் மாத்திரம் இறக்குவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது.
துறைமுக தொழிற்சங்கம் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடல் மேற்கொண்டு தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிடுவதற்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிட்ட காமினி லொக்குகே, அனைத்து தொழிற்சங்கங்கள் துறைமுகங்களில் ஏற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பிரதமருடன் இன்று காலை விசேட கலந்துரையாடல் மேற்கொண்டது. பாரந்தூக்கிகள் அனைத்தையும் துறைமுகத்தில் இறக்குவதற்கு கலந்துரையாடல் மேற்கொண்டு நாங்கள் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளோம்.
அதேபோன்று இந்த பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடல் மேற்கொண்டு இது தொடர்பில் தீர்வு பெற்று தருவதற்கும் பிரதமர், தொழிற்சங்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அனைத்து தொழிற்சங்கங்களும் பிரதமருடன் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளது. துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் மூவர் பாரந்தூக்கிகள் மீது ஏறியுள்ளளனர்.
அவர்களை அதில் இருந்து கீழே இறக்கி கலந்துரையாடல் மேற்கொண்டு, இதற்காக தீர்வு பெற இணக்கப்பட்டாடு எட்டப்பட்டது. பிரதமருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் மிகவும் பயனுள்ள கலந்துரையாடலாக காணப்பட்டது. அது தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம் என தெரிவித்துள்ளார்.