ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும் பங்கேற்கவிருந்த தேர்தல் பிரசார சந்திப்புக்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும் பங்கேற்கவிருந்த தேர்தல் பிரசார சந்திப்புக்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தீர்மானித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 13, 14, மற்றும் 15 ஆம் திகதிகளில் ஜனாதிபதி மற்றும் பிரதமரும் பங்கேற்கவிருந்த அனைத்து தேர்தல பிரசார சந்திப்புக்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் ஏற்பாடு செய்யும் அனைத்து சந்திப்புக்கள் மற்றும் சிறிய கூட்டங்களை மட்டுப்படுத்துமாறு அந்த முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸவினால் கோரப்பட்டுள்ளது.