பல்கலைக்கழக சமூகம் குருபரனுடைய விடயத்தில் பக்கபலமாக செயற்படவில்லை என்பது எமக்கு கவலையளிக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரு...
பல்கலைக்கழக சமூகம் குருபரனுடைய விடயத்தில் பக்கபலமாக செயற்படவில்லை என்பது எமக்கு கவலையளிக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
இன்றைய தினம் கல்வி ரீதியாகவும் சமூகரீதியாகவும் நாம் பின்னடைவைச் சந்தித்து இருக்கின்றோம். அதற்கு காரணம் கலாநிதி குமரவடிவேல் குருபரன் யாழ் பல்கலைக்கழகத்தில் சட்ட விரிவுரையாளராகவும் சட்டத்தரனியாகவும் பணியாற்ற முடியாது என திட்டமிடப்பட்ட வகையிலே தடுக்கப்படமை ஆகும்.
குருபரன் சிரேஸ்ட விரிவுரையாளராக பல வருடங்களாக கடமையாற்றி வருகின்றார். அவர் தனக்கான தனித்துவமான இடத்தினை சட்டத்துறையில் வைத்திருக்கின்றார். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக செயற்பட்டுக்கொண்டிருந்த அதே சமயம் சமுகத்திற்கு முக்கியமான விடையங்களில் சட்ட ஆலோசகராகவும் தனது பணியினை தொடர்ந்து முன்னெடுத்து இருக்கிறார். விசேடமாக வடக்கு கிழக்கில் இராணுவம் எமது மக்களை தாக்குகின்ற போது, மக்களை கட்டுப்படுத்துகின்ற போதெல்லாம் எதுவித தயக்கங்களும் இல்லாமல் பல பங்களிப்பை எமது சமூகத்திற்கு வழங்கியுள்ளார்.
இராணுவம் மீதான வழக்கில் குருபரன் மும்முரமாக வாதாடி இராணுவத்தின் குற்றங்களை அம்பலப்படுத்தி வந்த நிலையில், இராணுவம் நேரடியாக தலையிட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆணைக்குழுவிற்கு அழுத்த்தை பிரயோகித்தது. அதன் காரணமாக பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளராக செயற்படுவதாக இருந்தால் சட்டத் தொழிலை குருபரன் கைவிட வேண்டும் என மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்தது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
யாழ் பல்கலைக்கழக சட்ட பீடத்தினை சிந்தித்து செயற்படுவதனை தடுத்து வெறுமனே புத்தப் பூச்சிகளாக மாணவர்களையும், விரிவுரையாளர்களையும் முடக்குகின்ற செயற்பாடாகவே நாம் பார்க்கின்றோம். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள்ளும் இராணுவத் தலையீடுகள் அதிகரித்துள்ளது. இராணுவத்தினர் நெருக்கடி நிலைமைகளினை உருவாக்கி, இனவாத்தை தூண்டி யாழ் பல்கலைக்கழகத்தினை முடக்குவதற்கு என திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்ட எடுகப்பட்ட முடிவாகவே குருபரன் மீதான அழுத்தத்தை நாம் பார்கின்றோம்.
குருபரன் வேறு வழியின்றியே பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் பதவியினை இராஜினமா செய்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் எமது இனத்தினை அழித்தவர்கள் ஆட்சிபீடமேறியுள்ளார்கள், இராணுவ மயமாக்கல் அதிகரித்துள்ளது. அப்படியான சூழலில் தான் தனது சமுக செயற்பாடுகளை விரிவுரையாளராக தொடரப்போகிறாரா அல்லது சட்டதரணியாக கொண்டு நடாத்தப் போகின்றாரா என்ற தெரிவில் இரண்டாவது தெரிவினை மேற்கொண்டமை பாரட்டதக்கதாகும்.
பல்கலைக்கழக சமூகம் குருபரனுடைய விடையத்தில் பக்கபலமாக செயற்படவில்லை என்பது எமக்கு கவலையளிக்கின்றது. உரிய நேரத்தில் உன்மைக்கூம் நேர்மைக்கும் குரல் கொடுக்கவேண்டும் என்பதனை பல்கலைக்கழக சமூகம் புரிந்துகொள்ளவேண்டும். குருபரன் மீதான நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கமே முதலில் மேற்கொண்டது. அதன் தொடர்சியே தற்போது நிகழ்கின்றது. கடந்தகால நல்லாட்சிக்கும் தற்போதய கோட்டபாய தலைமையிலான கொடுங்கோல் ஆட்சிக்கும் எதுவிதமான வேறுபாடுகளும் இல்லை என்பதை குருபரனுடைய விடையத்தில் அறிந்து கொள்கிறோம், என்றார்.