இயக்கச்சி தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள், குடும்பத...
இயக்கச்சி தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள், குடும்பத்தினர் என ஒரு தொகுதியினர் இயக்கச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிற்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தல் 285 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 9 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
வடக்கில் இன்று வேறு பகுதிகளில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை.