இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 1) சபுகஸ்கந்த ஹெய்யந...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1) சபுகஸ்கந்த ஹெய்யந்துடுவ பகுதியில் வசிக்கும் 86 வயது பெண். இவர் 22ம் திகதி ஐ.டி.எச். வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட்டின் கடுமையான தொற்று நிலை.
02. கொழும்பு 15, மட்டக்குளிய பகுதியில் வசிக்கும் 60 வயது நபர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கொவிட் இனங்காணப்பட்ட பின் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (23) இறந்தார். கொவிட் 19 நோய்த்தொற்றால், இரத்த விஷம் அடைந்தமை மரணத்திற்கு காரணம்.
03. கொழும்பு 14 பகுதியில் வசிக்கும் 60 வயது பெண். மாரடைப்பு அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று ( 23) மரணமடைந்துள்ளார். கொவிட் 19 உடன் மாரடைப்பு ஏற்பட்டுள்ளமை மரணத்துக்கு காரணம்.
இதையடுத்து கொரோனா தொற்றுக்குள்ளாகி உயரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.