அபிவிருத்தி வேலைகளின் போது, சம்பந்தப்பட்டுள்ள சகல திணைக்களங்களும் ஒருங்கிணைந்து பணியாற்றாததன் வெளிப்பாடு நேற்று முதல் பெய்கின்ற மழையின் தாக்...
அபிவிருத்தி வேலைகளின் போது, சம்பந்தப்பட்டுள்ள சகல திணைக்களங்களும் ஒருங்கிணைந்து பணியாற்றாததன் வெளிப்பாடு நேற்று முதல் பெய்கின்ற மழையின் தாக்கத்தில் வெளிப்பட்டிருக்கிறது என பலரும் கூறுகின்றனர்.
வீதி அமைப்பவர்கள் தங்கள் பாட்டுக்கு, றோட்டுப் போடுவதில் மட்டும் கவனமாக வீதிகளை உயர்த்தி , ஏற்கனவே இருந்த வடிகால்களை மூடி வீதியமைத்து விட்டுத் தங்கள் பாட்டில் போய் விட, மழை காலங்களில் வீதிகளில் இருந்து வாய்க்கால் வழி செல்ல வேண்டிய வெள்ளம் வீடுகளுக்குள் வந்து நிற்கிறது.
வீதி வேலைகளைத் திட்டமிடும் போது, நீரமைப்பு - வடிகால்களுடன் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் தங்களுக்கிடையில் கலந்து பேசி திட்டங்களை வகுத்து, வாடிகால்களை அமைத்த பின்னர் வீதிகளை அமைத்தருந்தால் இந்த நிலமை ஏற்பட்டிருக்காதென பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.