அண்ணன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோடீஸ்வரனாக இருப்பதால் அவருக்கு அரசாங்க பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் தேவைப்படாது என தான் நினைப...
அண்ணன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோடீஸ்வரனாக இருப்பதால் அவருக்கு அரசாங்க பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் தேவைப்படாது என தான் நினைப்பதாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் காலத்துக்கு காலம் முன்னுக்குப்பின் முரணாகச் செயற்படுவது அவர்களுக்கு கைவந்த கலையாகும். வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத விட்டதும் ஏதோவொரு காரணத்தின் அடிப்படையில்தான் என நினைக்கிறேன்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதியை பயன்படுத்த மாட்டார்கள் என எண்ணுகிறேன்.
ஏனெனில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு கோடீஸ்வரனாக காணப்படுவதால் அவர் தன்னுடைய சொந்த நிதியில் மக்களின் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.