யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் பணிப்பின் பேரில் யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளைத் தூய்மைப்படுத்தல் செயற்றிட்டத்தின...
யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் பணிப்பின் பேரில் யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளைத் தூய்மைப்படுத்தல் செயற்றிட்டத்தின் தொடக்க புள்ளியாக இன்று (17.01.2021) யாழ் நகர் பகுதியை தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் காலை 7 மணியில் இருந்து நடைபெறுகிறது.
யாழ்.மாநகர சபை தூய்மைப்பணியாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.