யாழ்.மாநகரம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக யாழ்.கல்வி வலய பாடசாலைகள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் 2ம் தவண...
யாழ்.மாநகரம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக யாழ்.கல்வி வலய பாடசாலைகள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் 2ம் தவணை ஆரம்பமாகும்போதே யாழ்.வலய பாடசாலைகளும் திறக்கப்படும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் வரு வாரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுகிறது. கடந்த மார்ச் 29ஆம் திகதி தொடக்கம் யாழ்.கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது.
எனினும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய சிறப்பு விடுமுறை நாளை தொடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்படுகிறது. இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள்
எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பித்திலேயே திறக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.