கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு 11 நிறங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மேல் ...
கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு 11 நிறங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவிக்கின்றார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்குள் பிரவேசித்த 78000 வாகனங்களுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நாளாந்தம் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த ஸ்டிக்கர்களின் அளவு போதுமானது என தாம் எண்ணுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதையடுத்தே, ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
எனினும், நாளாந்தம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவிக்கின்றார்.