எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார். ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 15 ரூபா நட்டமும், ஒரு லீற்றர...
எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 15 ரூபா நட்டமும், ஒரு லீற்றர் டீசலுக்கு 16 ரூபா நட்டமும் காணப்படுகின்ற நிலையிலேயே, எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான விடயங்களை கருத்திற்கொண்டே, இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம், விலை அதிகரிப்புக்கான கோரிக்கையை விடுத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த விடயம் குறித்து அமைச்சரவை கூட்டத்தின் போது, நிதி அமைச்சருடன் தான் கலந்துரையாடியதாகவும், திறைசேரியின் நிலைமை குறித்து நிதி அமைச்சர் தமக்கு தெளிவூட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, எரிபொருள் விலையை அதிகரிக்க மேலும் சில மாதங்கள் ஆகும் எனவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதில் அர்த்தமில்லை எனவும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிடுகின்றார்.