கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை இரவு 11 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி...
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை இரவு 11 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்படுத்தல் திட்டத்தின் செயற்பாடுகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கு நாளை இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.