கைதடியில் அமைந்துள்ள அரச முதியோர் இல்லப் பராமரிப்பில் உள்ள பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய் தந்தையர்கள் இறந்தால் யாழ் மாவட்ட அரச அதிகாரிகளே பொற...
கைதடியில் அமைந்துள்ள அரச முதியோர் இல்லப் பராமரிப்பில் உள்ள பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய் தந்தையர்கள் இறந்தால் யாழ் மாவட்ட அரச அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டுமென உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
நேற்றைய தினம் பள்ளி கிழமை கைது அடியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளுக்காக சென்ற நிலையில் தமக்கு வழங்கப்படவில்லை என எதிர்ப்பு தெரிவிக்கும் போது அவர்களை இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் கைதட்டி அரசு முதியோர் இல்லத்தில் சுமார் 150 க்கு மேற்பட்ட முதியவர்களை நாம் பராமரிக்கிறோம்.
சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்த நிலையில் நாமும் எரிபொருள் பெறுவதற்காக சென்றோம் எமக்கு வழங்க முடியாது என சொன்னார்கள்.
நாம் மத்திய அரசின் சுகாதார உத்தியோகத்தர்களாக அங்கீகரிக்கப்படாத நிலையில் எமக்கு வழங்க மாட்டோம் என தெரிவிப்போர் நாமும் சுகாதார உத்தியோகத்தர்களின் சேவையே ஆற்றுகிறோம்.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களை குளிப்பாட்டுவது உணவு பரிமாறுவது மருந்து கொடுப்பது போன்ற சேவைகளை நாமே ஆற்றுகிறோம்.
முதியவர்களுக்கு மதிய உணவு வழங்காமல் வட மாகாண பிரதம செயலாளரினால் கையெழுத்திடப்பட்ட கடிதப் பிரதியுடன் வரிசையில் நிற்கிறோம் வழங்க முடியாத என்கிறார்கள்.
ஆகவே எரிபொருள் நமக்கு தராவிட்டால் நாம் முதியோர் இல்லத்துக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும் நிலையில் அங்கு தங்கியுள்ள முதியவர்கள் உணவு மருந்து வழங்காது இறப்பார்கள் ஆனால் யாழ் மாவட்டத்தில் உள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.