அரச ஊழியர்களுக்கு வெள்ளிகிழமைகளில் வழங்கப்பட்ட விடுமுறைக்கான சுற்று நிரூபத்தை ரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் தட்டுப...
அரச ஊழியர்களுக்கு வெள்ளிகிழமைகளில் வழங்கப்பட்ட விடுமுறைக்கான சுற்று நிரூபத்தை ரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டு பிரச்சினை காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினை தற்போது வழமைக்கு திரும்புகின்றமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து பிரச்சினைகள் காணப்பட்ட நிலையில், அரச ஊழியர்களுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், வெள்ளிகிழமைகளில் விடுமுறையை வழங்க கடந்த ஜுன் மாதம் 13ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
மூன்று மாத காலத்திற்கு இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், விவசாய நடவடிக்கைகளுக்கான ஆரம்பகட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு போதுமான காலம் கிடைக்கப் பெற்றுள்ளமை மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளமை ஆகியவற்றை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.