விசமப்பிரச்சாரம் செய்யும் சில்லறை குழப்பவாதிகளின் வீண் செயல்களை வன்மையாக கண்டிப்பதாக ஜி. ரி. லிங்கநாதன் தெரிவித்துள்ளார். குளிர்பான...
விசமப்பிரச்சாரம் செய்யும் சில்லறை குழப்பவாதிகளின் வீண் செயல்களை வன்மையாக கண்டிப்பதாக ஜி. ரி. லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
குளிர்பான போத்தல்களில் லிங்கநாதனது தேர்தல் பிரச்சார அட்டைகளை காட்சிப்படுத்தியமை தொடர்பாக இணையதளங்களில் வெளிவந்துள்ள செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனது அதிகரித்த செல்வாக்கினை மழுங்கடிக்க எனது தேர்தல் பிரச்சார அட்டைகளை பெற்று வவுனியா வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் குளிர்பான போத்தல்களில் ஒட்டி விசம பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்தமையை வன்மையாக கண்டிக்கின்றேன்.
இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் விசமிகளை மக்கள் நன்கறிவார்கள். வவுனியா நகரசபை தலைவராகவும் வடக்கு மாகாணசபை உறுப்பினராகவும் இருந்த காலப்பகுதி தொடக்கம் இன்றுவரை மக்களால் நன்கு அறியப்பட்டவன் நான் என்ற ரீதியில் இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் செய்யவேண்டிய அவசியம் எனக்கில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நேர்மையானதாகவும் தூய்மையானதாகவும் மேற்கொள்ள வேண்டிய அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கேவலமான செயற்பாடுகளை மேற்கொள்ளும் விசமிகள் சமூகத்தின் கொடிய நோய்களாகவே இருப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.