நகர அபிவிருத்தி மற்றும் கரையோர பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால்120மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட...
நகர அபிவிருத்தி மற்றும் கரையோர பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால்120மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையம் இன்றையதினம் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர்,மாநகர முதல்வரினால் மக்கள் பயன்பாட்டுக்காக வைபவரீதியாகதிறந்துவைக்கப்பட்டது
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் குறித்த நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையம் இன்றைய தினம் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டதோடு நெடுந்தூர பேருந்து நிலையமானது யாழ் மாநகரசபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற குறித்த நிகழ்வில்
கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் , வடமாகாண ஆளுநர், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர், யாழ் மாவட்ட அரச அதிபர், யாழ் மாநகர முதல்வர்,நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணபணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ,மாநகர சபை உறுப்பினர்கள்கலந்துகொண்டனர்.