இலங்கை போக்குவரத்து சபையால் சாலையில் சாரதி நடத்துனர் உட்பட 33 பேர் அலுவலக கடமையில் இருப்பதால் யாழ் மாவட்டத்தில் இ.போ.ச பஸ் சேவைகளை நடத்துவ...
இலங்கை போக்குவரத்து சபையால் சாலையில் சாரதி நடத்துனர் உட்பட 33 பேர் அலுவலக கடமையில் இருப்பதால் யாழ் மாவட்டத்தில் இ.போ.ச பஸ் சேவைகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் அமைந்துள்ள யாழ் சாலையின் தலைமை அலுவலகத்தில் சாரதி நடத்துனர் களாக கடமையாற்றுபவர்களின் சேவைக் காலத்தை அடிப்படையாக வைத்து 33 பேருக்கு அலுவலகத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
யாழ் சாலையில் இருந்து சுமார் 85 பேருந்து சேவைகள் யாழ் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடுகின்ற நிலையில் பெரும்பாலும் காப்பாளராக கடமையாற்றி அவர்கள் அலுவலகத்தில் கடமையாற்றுவதால் தற்போது 65 வரையான பஸ் சேவைளே சேவையில் ஈடுபடுகின்றன.
யாழ் மாவட்டத்தில் சகல பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் இ.போ.ச பஸ்ககள் சேவையில் ஈடுபடுவது குறைவாக உள்ளதாக பாடசாலை அதிபர்களால் குற்றம் சாட்டப்படுகிறது .
யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் யாழில் இ.போ.ச பஸ் சேவைகள் ஒழுங்காக இடம்பெறாமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அபிவிருத்திக் குழுக் கூட்டத் தீர்மானம் மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் யாழ் சாலை அலுவலகத்தில் 20பேரை மட்டும் கடமையாற்றுமாறு ஏனையோரை முன்னைய பணிக்கு திரும்புமாறு வட மாகாண செயலாற்றும் முகாமையாளரால் பாணிக்கப்பட்ட போதும் குறித்த தீர்மான நடைமுறைக்கு வரவில்லை.
ஆகவே குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளும் அரசியல்வாதிகளின் தலையீடு செய்து மக்களுக்கான பொதுப் போக்குவரத்து சேவையை ஒழுங்குபடுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.