யாழில் சித்திரா பெளர்ணமி நாளில் நட்சத்திர விடுதியில் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு கல்விக் கருத்தரங்கு.. சுகாதாரப் பணிப்பாளர் அறிவிப்பு. ய...
யாழில் சித்திரா பெளர்ணமி நாளில் நட்சத்திர விடுதியில் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு கல்விக் கருத்தரங்கு.. சுகாதாரப் பணிப்பாளர் அறிவிப்பு.
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26ஆம் திங்கட்கிழமை சித்திராப் பௌர்ணமி தினம் அன்று யாழ் மாவட்ட குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான கல்விக் கருத்தரங்கு வருகை தரவேண்டும் என வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார் .
யாழ்ப்பாணத்தில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் குறித்த நிகழ்வு நடாத்த ஏற்பாடு செய்திருப்பதுடன் பங்குபற்றும் அனைவருக்கும் மதிய போசனமும் வழங்கப்படுவதாகவும் அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாயை இழந்த அனைவரும் அனுஷ்ரிக்கும் சித்ரா பெளர்ணமி விரத தினத்தில் வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் குடும்பநல உத்தியோகத்தர்களை அழைப்பது தொடர்பில் அவர்கள் விசனம் அடைந்துள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் திருமண விழாககளுக்கள் மற்றும் ஏனைய களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நிகழ்வு யாழ் மாவட்ட மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.