12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்தி, ஔடத விநியோகம், ...
12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்தி, ஔடத விநியோகம், ஔடத கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.
அத்துடன், 18 முதல் 30 வயது வரையான வயதெல்லைக்குட்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி செலுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதன் முக்கியத்துவம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு தடுப்பூசி கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.