யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் 6600 லீட்டர் பெட்ரோல் நேற்று செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டதாக உரி...
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் 6600 லீட்டர் பெட்ரோல் நேற்று செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டதாக உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா தெரிவித்தார்.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடுகள் நிலவி வரும் நிலையில் இன்றைய தினம் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் அமைந்துள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மாவட்ட செயலகத்தில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக பொதுமக்களுக்கு 72வீதமும்
அரச உத்தியோகத்தர்களுக்கு 28 வீதமும் மும் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை பெட்ரோலுக்காக காத்திருந்த மக்களுக்கு தாகசாந்தி நிலையம் அமைத்து இராணுவம் மற்றும் போலீசார் குளிர்பானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.