ஊடக அறிக்கை மூலம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் பதவி செயலற்று போயுள்ளது என கூற முடியாது என வடக்கு மாகாண சபைய...
ஊடக அறிக்கை மூலம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் பதவி செயலற்று போயுள்ளது என கூற முடியாது எனவடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது சி.வி.கே.சிவஞானம் இவ்வாறுதெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசு கட்சி அதனுடையசெயல்பாடுகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் சம்பந்தமாக பல செய்திகள் வெளிவந்துள்ளன.
அது பற்றி விமர்சனம் செய்ய நாங்கள் விரும்பவில்லை ஆனால் இருந்தாலும் கூட நேற்றைய தினம் ரெலோவின்பேச்சாளர் சுரேந்திரன் சம்பந்தர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இல்லை எனவும், கூட்டமைப்புசெயலற்று போய்விட்டதால் அவருடைய தலைவர் பதவி இல்லாமல் போய் என கூறியதாக ஊடகங்கள் கூறுகின்றன.
தமிழரசு கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை ஆனால் இரண்டு கட்சிகளும் தாங்கள் காலம் காலமாக பலகாலமாகவே உரசப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விடயம் அந்த விடயத்தை அவர்கள் நிறைவேற்றி இருக்கின்றார்கள் அதுஅவர்களுடைய உரிமை கூட்டமைப்பினுடைய தலைவர் என்பது இதுவரையில் அதாவது நாடாளுமன்ற தேர்தல்கள்முடிந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மூன்று கட்சிகளும் அதனுடைய நாடாளுமன்றஉறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் சம்பந்தன் அவர்களை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்து இருக்கின்றார்கள்.
அதுக்கு முன்பும் அவ்வாறே நடந்தது ஆகவே அவருடைய தெரிவு என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய தலைவர்தெரிவு என்பது இதுவரையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றாலே அது நாடாளுமன்ற குழுவாகவேஇருந்திருக்கின்றது.
நாடாளுமன்ற குழு தெரிவு செய்த சம்பந்தர் இன்னும் அந்த பதவியில் தான் இருக்கின்றார் ஆகவே அவரை நீக்குவதோஅல்லது அந்த பதவி வறிதாக்குவதோ வெறுமனே ஒரு ஊடக அறிக்கை மூலம் சொல்ல முடியாது.
முறைப்படியாக நாடாளுமன்ற குழு கூடி அல்லது விரும்பினால் அவரை நீக்கலாம் அல்லது அவர் விரும்பினால்விலகலாமே தவிர பதவி வறிதாக்கள் செயலற்று போதல் என நீண்ட வரலாற்றைக் கொண்டு ஒரு தலைவரை இவ்வாறுஅவமதிக்கின்ற ஒரு கூற்று என்னை பொறுத்தவரையில் தமிழரசு கட்சி சார்ந்தது மட்டுமல்லாது பொதுவாகவே ஒருமனிதனுடைய மதிப்பு சார்ந்த விடயத்திலே அதை ஆட்சேபிக்கின்றேன்.
அது தவறு திரு சம்பந்தன் அவர்கள் இன்னும் நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவராகவும்செயற்படுகின்றார் என்பதே உண்மை”என்றார்.