முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று, மதுரை சிறையில் உள்ள ரவிச்சந்திரன், பரோலில் அருப்புக்கோட்டை வந்தார். அருப்...
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று, மதுரை சிறையில் உள்ள
ரவிச்சந்திரன், பரோலில் அருப்புக்கோட்டை வந்தார்.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், குடும்ப சொத்து பிரிவினைக்காக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பரோல் கேட்டு மனு செய்தார்.
நேற்று முதல் மார்ச், 19 வரை, 15 நாட்கள் பரோலில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
இதையடுத்து, பாதுகாப்புடன், அருப்புக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தார்.
டி.எஸ்.பி., தனபால் தலைமையில், 80 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
வீட்டை சுற்றி, கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன