ஐக்கிய நாடுகள் சபைக்கு விரைந்து தங்களுக்கான நீதியை பெற்றுத்தருமாறும் திருகோணமலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட...
ஐக்கிய நாடுகள் சபைக்கு விரைந்து தங்களுக்கான நீதியை பெற்றுத்தருமாறும் திருகோணமலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரதிபுரம் சிவன் ஆலயத்திற்கு முன்னால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அத்துடன், இன்றைய தினம் பாரதிபுரம் கிராமத்திற்கு அருகே உள்ள பாலத்தடிச்சேனை சித்திவிநாயகர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்திற்கு எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சென்றுள்ளார்.இந்த நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் இடத்திற்கு அவர் வருகை தருவார் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்பார்த்திருந்தாக குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் குறித்த இடத்திற்கு அவர் வருகை தராததை இட்டு மிகவும் வேதனை அழிப்பதாக தங்களது மன ஆதங்கத்தை இதன்போது வெளிப்படுத்தியுள்ளனர்.