விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன் (தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைத்திரு...
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன் (தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று (23) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் குறித்த இடத்தில் அகழ்வை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டது.
தர்மபுரம் 7ம் யூனிற் பகுதியில் உள்ள குறித்த வீட்டிற்குச் சென்ற விமானப்படையினரும், விசேட அதிரடிப்படையினரும் தர்மபுரம் பொலிசார், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவையாளர் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது சுமார் ஆறு அடி ஆழத்தில் பொலித்தீன் கொண்டு சுற்றப்பட்டு பெட்டி ஒன்றினுள் வைத்து புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி மற்றும் கைத்துப்பாக்கி தோட்டா ஐந்து என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த முன்னாள் போராளி புலம்பெயர் நாட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.