யாழில் “முன்னோக்கி நகர்வோம்" செயற்றிட்ட அங்குரார்ப்பண நிகழ்வு வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தலைமையில் இன்று (...
யாழில் “முன்னோக்கி நகர்வோம்" செயற்றிட்ட அங்குரார்ப்பண நிகழ்வு வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தலைமையில் இன்று (15)நடைபெற்றது.
போர் நிறைவடைந்து 10 ஆண்டுகளான நிலையில், வடமாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களுக்கு வினைத்திறனான சேவை வழங்கல் தொடர்பில் மாகாண சபையும், மத்திய அரசாங்கத்தின் நிறுவனங்களும் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் வடமாகாண சபை முக்கிய வகிபாகம் வகிக்கின்றது. 



இந்நிலையில் மத்திய, மாகாண அரசாங்கங்கள் வழங்குகின்ற சேவையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை இவ்வலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.
இச் செயற் திட்டம் கட்சி அல்ல கட்சி சார்ந்து செயற்படவும் மாட்டாது. எனவே சகல தரப்பினரும் வந்து இணைப்பாளராக இணைய முடியும் என்று தவராசா அழைப்பு விடுத்துள்ளார். இதன் இணைப்பாளராக மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் விளங்குகின்றார்.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன் அ.பரம்சோதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்வலுவலகம் யாழ்.கைலாசபதி பிள்ளையார் கோவில் பின் வீதியில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.