யாழ் நகர்ப் பகுதியில் கிராம சேவகர் J/ 87 பிரிவில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் தனியார் ஒருவர் கோட்டல் ஒன்றை கட்டுவதற்கு முயற்...
![யாழ் நகர்ப் பகுதியில் கோட்டல் கட்டுவதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது எதற்காக?](https://www.tamilan24.com/storage/images/2018/06/IMG-ee688e6bf8b0c2a90c07e6f890e28d7f-V_1080.jpg)
யாழ் நகர்ப் பகுதியில் கிராம சேவகர் J/ 87 பிரிவில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் தனியார் ஒருவர் கோட்டல் ஒன்றை கட்டுவதற்கு முயற்சி எடுத்த போது அதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் அந்தப் பகுதியில் கோட்டல் கட்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
கோட்டல் கட்டுவதற்கு எதிராக முஸ்லிம் மக்கள் அண்மையில் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொண்டிருந்தனர். இது இவ்வாறு இருக்கையில் இந்த சம்பவம் தொடர்பில் அறிவதற்காக Tamilan 24 செய்தியாளர்கள் களத்தில் இறங்கினர்.
கோட்டல் கட்டுவதற்கான உரிய அனுமதியை கோட்டல் கட்டுவோர் பெற்றுள்ளனர் என்பதை அறியமுடிந்தது. இந்தக் கோட்டலை கட்டுவதால் பிரதேசத்துக்கு பாதிப்பு என்று அந்தப் பிரதேச மக்கள் சொல்கின்றனர். ஆனால் எப்படிப்பட்ட பாதிப்புகள் வரும் என்று சொல்லவில்லை.
யாழ் நகரில் பல கோட்டல்கள் நெருக்கமான குடியிருப்பு உள்ள இடங்களில் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கோட்டல்களால் குடியிருப்புகளுக்கு பாதிப்பு நடந்ததாக இதுவரை செய்திகள் வெளிவரவில்லை. அப்படி இருக்கும் போது இந்தக் கோட்டலைக் கட்டுவதால் மக்களுக்கு பாதிப்பு வரும் என்று முன்னரே எப்படி எதிர்வு கூற முடியும்.
யாழில் குடியிருப்பு அமைந்த பகுதியில் பல கோட்டல்கள் கட்டப்பட்டிருக்கும் போது இந்தக் கோட்டலை கட்டுவதற்கு முஸ்லிம் மக்கள் ஏன் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.
கோட்டல் கட்டுவதால் வேலையில்லாத பலருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கமுடியும். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
![](https://www.tamilan24.com/storage/images/2018/06/333000999000.jpg)
![](https://www.tamilan24.com/storage/images/2018/06/IMG-ecc553ade3644874fba8a0d27efbf1a5-V_1080.jpg)
![](https://www.tamilan24.com/storage/images/2018/06/IMG-77e534147f5ba31825ba76c963e040f1-V_1080.jpg)