யாழ் மாநகரின் எதிர்கால நகர்ப்புற அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக வடக்குமாகாண ஆளுநர் கௌரவ சுரேன் ராகவன் மற்றும் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்ம...
![வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்.மாநகர முதல்வர் இணைந்து நகர்வலம்..](https://jaffnazone.com/storage/images/2019/01/DSCF7140_1080.jpg)
யாழ் மாநகரின் எதிர்கால நகர்ப்புற அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக வடக்குமாகாண ஆளுநர் கௌரவ சுரேன் ராகவன் மற்றும் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் ஆகியோரின் தலைமைமையில்
கடந்த வெள்ளிக்கிழமை(18) யாழ் பிரதான பேரூந்து நிலையம், அங்காடி கடைத்தொகுதி உள்ளிட்ட நகரின் அபிவிருத்திகள் இடம்பெறவுள்ள முக்கிய இடங்களுக்கு கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வில் கௌரவ ஆளுநர் மற்றும் முதல்வர் இணைந்து குறிப்பிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், தற்போதைய நிலமைகள், தேவைகள் குறித்தும் நேரில் அறிந்து கொண்டனர்.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற திட்டங்கள் தொடர்பில் இதன் போது முதல்வரினால், கௌரவ ஆளுநருக்கு தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக் களவிஜயத்தின் போது யாழ் மாநகர ஆணையாளர், சிரேஸ்ட அதிகாரிகள், ஆளுநரின் செயலாளர், உயர் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் என்போர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
![](https://jaffnazone.com/storage/images/2019/01/DSCF7144_1080.jpg)
![](https://jaffnazone.com/storage/images/2019/01/DSCF7141_1080.jpg)
![](https://jaffnazone.com/storage/images/2019/01/DSCF7146_1080.jpg)
![](https://jaffnazone.com/storage/images/2019/01/DSCF7134_1080.jpg)
![](https://jaffnazone.com/storage/images/2019/01/DSCF7147_1080.jpg)
![](https://jaffnazone.com/storage/images/2019/01/DSCF7140_1080.jpg)