குருநாகல் வைத்தியர் ஷாபி அகமட் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று குருநாகல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் பின்னர்...
குருநாகல் வைத்தியர் ஷாபி அகமட் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று குருநாகல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் பின்னர், பிணைக்கோரிக்கை தொடர்பில் நீதிபதி உத்தரவு வழங்குவது நீண்ட தாமதமானது. மாலை 5.45 மணிக்கு நீதிபதி தீர்ப்பளிப்பதாக குறிப்பிட்டிருந்தாலும், நீண்ட தாமதத்தின் பின்னர் சற்று முன்னர் பிணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
ஷாபி சட்டவிரோத கருத்தடை சிகிச்சை மேற்கொண்டார் என்பதற்கு எந்த ஆதாரமுமில்லையென சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
இரண்டரை இலட்சம் ரூபா பிணை, 25 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டார். ஓகஸ்ட் 9ம் திகதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று தீர்ப்பு வழங்குவதையொட்டி, குருநாகல் நீதிமன்ற வளாகத்தில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இன்று குருநாகல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் பின்னர், பிணைக்கோரிக்கை தொடர்பில் நீதிபதி உத்தரவு வழங்குவது நீண்ட தாமதமானது. மாலை 5.45 மணிக்கு நீதிபதி தீர்ப்பளிப்பதாக குறிப்பிட்டிருந்தாலும், நீண்ட தாமதத்தின் பின்னர் சற்று முன்னர் பிணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
ஷாபி சட்டவிரோத கருத்தடை சிகிச்சை மேற்கொண்டார் என்பதற்கு எந்த ஆதாரமுமில்லையென சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
இரண்டரை இலட்சம் ரூபா பிணை, 25 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டார். ஓகஸ்ட் 9ம் திகதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று தீர்ப்பு வழங்குவதையொட்டி, குருநாகல் நீதிமன்ற வளாகத்தில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.