நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புற்றுநோயாளர்களின் உடல் கழிவுகள் யாழிற்கு எடுத்து வரப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் இன்று வெளியாகியுள்ளது. பல பா...
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புற்றுநோயாளர்களின் உடல் கழிவுகள் யாழிற்கு எடுத்து வரப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் இன்று வெளியாகியுள்ளது. பல பாகங்களில் இருந்தும் எடுத்து வரப்பட்டுள்ள மனித உடல் பாகங்கள் தெல்லிப்பழை புற்றுநோயாளர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று நடந்த யாழ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் வெளியானது.
“தென்னிலங்கையின் பல பாகங்களிலுமிருந்து தெல்லிப்பழை புற்றுநோயாளர் வைத்தியசாலைக்கு மனித உடல் பாகங்கள் கொண்டு வரப்படுகின்றன. புற்றுநோயாளர்களில் இருந்து அகற்றப்பட்ட பாகங்களை எரித்து அழிக்கவே அவை கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் தெல்லிப்பழை வைத்தியசாலையிலுள்ள இயந்திரத்தில் அவற்றை எரிக்க முடியாது.
1200 பாகை செல்சியஸ் வெப்பநிலையிலேயே அவற்றை எரிக்க வேண்டும். ஆனால் தெல்லிப்பழையிலுள்ள இயந்திரம் 850 பாகை செல்சியஸ் வெப்பத்தை வெளியிடுவது. இதனால் தெல்லிப்பழை புற்றுநோயாளர் வைத்தியசாலையில் அகற்றப்படும் மனித உடல் கழிவுகளையே எரிக்க முடியாமல் உள்ளது. இந்த நிலையில் எப்படி, தெற்கிலிருந்து மனித உடல் பாகங்கள் இங்கு எடுத்து வரப்பட்டன?“ என வலிகாமம் வடக்கு பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சஜீவன் கேள்வியெழுப்பினார்.
வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும் இந்த விடயத்தில் காட்டமான கருத்துக்களை வெளியிட்டார்.
“இங்கிலாந்திலிருந்து கழிவுகள் கொழும்பிற்கு வருகிறது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கா அனுப்பி வைக்கப்படுகிறது? இங்கு நடப்பது எதுவுமே எமக்கு தெரியாதென்று சில அதிகாரிகள் நினைத்துக் கொண்டு, இஷ்டப்படி நடக்கிறார்களா? இந்த கழிவுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்“ என்றார்.
வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன், மனிதக்கழிவுகள் தெல்லிப்பழையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டதுடன், அவற்றை திருப்பியனுப்ப நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தார்.
இன்று நடந்த யாழ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் வெளியானது.

“தென்னிலங்கையின் பல பாகங்களிலுமிருந்து தெல்லிப்பழை புற்றுநோயாளர் வைத்தியசாலைக்கு மனித உடல் பாகங்கள் கொண்டு வரப்படுகின்றன. புற்றுநோயாளர்களில் இருந்து அகற்றப்பட்ட பாகங்களை எரித்து அழிக்கவே அவை கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் தெல்லிப்பழை வைத்தியசாலையிலுள்ள இயந்திரத்தில் அவற்றை எரிக்க முடியாது.
1200 பாகை செல்சியஸ் வெப்பநிலையிலேயே அவற்றை எரிக்க வேண்டும். ஆனால் தெல்லிப்பழையிலுள்ள இயந்திரம் 850 பாகை செல்சியஸ் வெப்பத்தை வெளியிடுவது. இதனால் தெல்லிப்பழை புற்றுநோயாளர் வைத்தியசாலையில் அகற்றப்படும் மனித உடல் கழிவுகளையே எரிக்க முடியாமல் உள்ளது. இந்த நிலையில் எப்படி, தெற்கிலிருந்து மனித உடல் பாகங்கள் இங்கு எடுத்து வரப்பட்டன?“ என வலிகாமம் வடக்கு பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சஜீவன் கேள்வியெழுப்பினார்.
வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும் இந்த விடயத்தில் காட்டமான கருத்துக்களை வெளியிட்டார்.
“இங்கிலாந்திலிருந்து கழிவுகள் கொழும்பிற்கு வருகிறது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கா அனுப்பி வைக்கப்படுகிறது? இங்கு நடப்பது எதுவுமே எமக்கு தெரியாதென்று சில அதிகாரிகள் நினைத்துக் கொண்டு, இஷ்டப்படி நடக்கிறார்களா? இந்த கழிவுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்“ என்றார்.
வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன், மனிதக்கழிவுகள் தெல்லிப்பழையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டதுடன், அவற்றை திருப்பியனுப்ப நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தார்.