தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணி அமைப்பதற்காக எங்களுடன் சேர்பவர்கள் ய...
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணி அமைப்பதற்காக எங்களுடன் சேர்பவர்கள் யாருக்கும் நாங்கள் நிபந்தனை விதிக்கவில்லை. அதே போல எங்களுடன் இணைய விரும்புபவர்களும் எங்களுக்கு நிபந்தனை விதிக்கக் கூடாது. அவ்வாறு நிபந்தனை விதிப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் நிபந்தனை விதித்தால் பலமான கூட்டை உருவாக்க முடியாது.
இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
தனக்குப்பின்னர் கூட்டணியின் தலைமைத்துவத்தை கஜேந்திரகுமார் ஏற்றுக்கொள்ளும்படி விக்னேஸ்வரன் தெரிவித்ததாக, அண்மையில் கஜேந்திரன் கூறியதில் துளியும் உண்மையில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ் மக்கள் கூட்டணி உருவாக்கப்பட்டு ஓராண்டை நெருங்கிக் கொண்டிருக்கின்ற இவ் வேளையில் எங்கள் கட்சியானது மெதுவாக என்றாலும் மிக உறுதியாக தன்னுடைய அரசியல் செயற்பாட்டைச் செய்து வருகின்றது. அந்த வகையில் எதிர்காலத்தில் எங்கள் கட்சியுடன் கொள்கை வழியில் கூட்டுச் சேர்வதற்கான கட்சிகள் மற்றும் அமைப்புக்களை நாங்கள் இணைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பது சகலரும் அறிந்த விடயம்.
இதில் நாங்கள் தெளிவான ஒரு நிலைப்பாட்டை இந்த இடத்தில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதாவது கொள்கை வழி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக இணைந்து செயற்படக் கூடிய கட்சிகளையும் அமைப்புக்களையும் நாங்கள் சேர்த்துக் கொள்கின்றோம். எதிர்காலத்திலும் அவ்வாறானவர்களைச் சேர்ப்பதற்காக எங்களினுடைய கட்சியின் கதவுகள் திறந்து இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக எங்கள் செயலாளர் நாயகம் குறிப்பிட்டது போல தமிழ் மக்கள் பேரவையில் கொள்கை ரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் இணைந்த குறிப்பாக எழுக தமிழ் விழிப்புணர்வுச் செயற்பாடுகளில் முக்கிய பங்கெடுத்த கட்சிகளை ஒன்றிணைத்து நாங்கள் முன்செல்கின்ற செயற்பாடுகளில் இப்பொழுதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இந்த வகையில் புதிதாக எங்களுடன் கொள்கை அடிப்படையில் இணைந்து தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்காக நேர்மையாகவும் துணிவுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படக் கூடியவர்களை எங்கள் கட்சியில் இணைந்து கொள்ளுமாறும் எங்களுடன் கூட்டுச் சேருமாறு எமது கட்சியின் செயலாளர் நாயகம் சார்பில் நான் அழைப்பு விடுத்துக் கொள்கின்றேன்.
ஏற்கனவே மக்களால் ஏகப் பிரதிநிதிகளாக ஒரு வகையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இன்று எந்த நிலைக்கு மக்களைக் கொண்டு வந்த விட்டிருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியும். உண்மையில் அவர்கள் அரசிற்கு விசுவாசமாக இருந்தார்களே ஒழிய எங்கள் மக்களுக்கு விஸ்வாசமாக இருக்கவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு விஸ்வாசமாக இருக்கவில்லை.
இதன் காரணமாகத் தான் ஒரு நேர்மையான ஒரு அர்ப்பணிப்புடைய எங்கள் கடந்த கால நிகழ்வுகளுக்கான அர்ப்பணிப்புகளுக்கான தியாகங்களுக்கான நிச்சயமாக ஒரு விடையைப் பெறும் நோக்கில் செயலாளர் நாயகம் அவர்கள் புதிய பண்புள்ள அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்தும் அடிப்படையில் இந்தக் கட்சியை அவர் தொடங்கியிருக்கின்றார். அதே போல நாங்கள் எதிர்காலத்திலும் நேர்மையான அரசியல் கலாச்சாரத்தை கொண்டு செல்வோம். நிச்சயமாக விக்கினேஸ்வரன் ஒரு நீதியரசர் மட்டுமல்லாமல் அவர் ஒரு ஆன்மீக வாதி என்ற அடிப்படையில் மக்களுக்கு கொடுத்த அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக தன்னாலானதை மக்களுக்கு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செய்வார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
கட்சியின் சார்பாக குறிப்பாக செயலாளர் நாயகம் சார்பாக அனைத்து தர்ப்பினர்களும் இந்தக் கூட்டணியில் இணைந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு ஒன்று சேருமாறு இருகரம் கூப்பி வரவேற்போம். அவர்களுக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. நாங்கள் எங்களுடன் இணைபவர்களுக்கு எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்கவில்லை.
அதே போலவே எங்களுடன் இணை வருபவர்களும் நிபந்தனை வதிப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவதும் இல்லை. அந்த வகையில் எங்களுடைய ஒன்றிணைவானது ஒரு சமரச அடிப்படையில் இருக்குமென்பதை இந்த இடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம். இதே வேளை எங்களது கூட்டணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைவதாயின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்துக் கொள்ளக் கூடாதென நிபந்தனை விதித்துள்ளதாக கூறுகின்றீர்கள்.
இந்த விடயம் தொடர்பாக எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கட்சியின் செயலாளர் நாயகம் விக்கினேஸ்வரன் ஐயாவினால் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது கொள்கைவழி நின்று செயற்படக் கூடிய அனைவரையுமே இணைத்து எங்கள் கட்சி முன் செல்ல வரும்புகின்றது என் கூறியிருக்கின்றோம்..
ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவையிலுமம் இணைந்து அதற்கும் மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எங்களுடன் சேர்ந்த ஒரு கொள்கைவழி செயற்படுவதற்குத் தயாராக இருக்கிறது. அதனால் தான் அவர்களுடன் சேர்ந்த செய்படுவது தொடர்பான பேச்சுக்கள் நடக்கின்றன. அதே போல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட பல கட்சிகள் அமைப்புக்களை இணைத்து கொள்கை வழியில் எல்லோரும் சேர்ந்து செல்லவே நாங்கள் விரும்புகின்றோம்.
ஆகையினால் அவர் சரியில்லை. இவர் சரியில்லை என்று விலத்தி வைக்க நாங்கள் விரும்பவில்லை. அந்த வகையில் தொடர்ந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உட்பட இதர கட்சிகள் அமைப்புக்களை இணைத்தக் கொள்ளத் தயாராக இருக்கின்றொம்.
நாங்கள் எங்கள் கட்சியினுடைய ஒன்றிணைந்த பயணத்தில் எங்களுடன் சேர்பவர்கள் நிபந்தனைகளை விதிப்பதையும் அதற்கேற்ப எங்கள் கட்சியின் செயற்பாடுகளையும் கொள்கைகளையோ தீர்மானங்களை மாற்றுவதற்கோ நாங்கள் தயாராக இல்லை. ஏற்கனவே கட்சி முடிவுகள் இருக்கிறது. மக்கள் விருப்பங்கள் இருக்கிறது. அதற்கமைய நடந்து கொண்டு செல்வோம். ஆகவே எங்களுடன் சேர்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிபந்தனை விதித்தால் அந்தக் கூட்ட பலம் மிக்க கூட்டாக இருக்க முடியாது.
மேலும் கூட்டணியின் தலைமைத்துவம் விக்னேஸ்வரன் ஐயாவிற்கு பின்னர் கஜேந்திரகுமார் பொன்னப்பலத்திற்கு வழங்குவதற்கு எழுத்து மூல உத்தரவாதம் வழங்கப்பட்டதாக கூறப்படுவதில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை. வழங்பப்பட்டதாக கூறுவது தவறான கருத்தாகும். ஆனால் எங்கள் கட்சியின் செயலாளர் நாயகம் நேரடியாக மின்னஞ்சல் வழியாக கஜேந்திருகுமாருக்கு பல விடயங்களை தெரிவித்திருக்கின்றார். இதுவரையில் அவ்வாறான கடிதங்களுக்கு கஜேந்திரகுமார் எந்தவிதமான பதில்களையும் வழங்கவில்லை என்று எம்மால் கூற முடியும்.
அதற்கு மேலாக மற்றப்படி வெளியில் நடக்கின்ற அல்லது சொல்லப்படுகின்ற விடயங்கள் அல்லது செய்திகளின் உண்மைத்தன்மை என்ன என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் அவ்வாறான கருத்துதக்கள் தொடர்பில் நேரடியாக எந்தவித பேச்சுக்களிலும் ஈடுபடவில்லை . அவ்வாறு இடபட்டிருந்தால் தானே அதைப்பற்றிக் கதைக்கலாம். இப்ப எங்களுக்கு மக்கள் நலன்களுக்காக கட்சிகள் இணைவதே தேவையாக இருக்கிறது. தேர்தல்கள் வருகின்ற போது அதன் பின்னர் தான் அது சம்மந்தமாக ஒரு சமரசத்திற்கு வரலாம். ஆக இப்பொழுது அடுத்த தலைமைத்துவம் தொடர்பில் எந்தவிமாகவும் கதைக்கவும் இல்லை. எதனையும் சொல்லவும் இல்லை. வழங்கப்பட்டதாக கூறுவது தவறான கருத்து.
இவ்வாறான பல கருத்தக்கள் வெளிவருகின்ற நிலையில் பேசித் தீர்ப்பதே சிற்நதது என்று கருதுகின்றோம். அவ்வாறான பேச்சுசுவார்த்தைக்கு நாங்கள் தயார். அதற்கான அழைப்பையும் விடுத்துள்ளோம். அதற்கமைய பேச்சுக்கு அவர்கள் வர வேண்டுமென்றும் விரும்புகின்றோம். அவ்வாறு வந்தால் தானே பல விடயங்கள் தொடர்பிலும் கதைக்கலாம். ஆக மொத்தத்தில் பேச்சுவார்த்தைக்கான எங்கள் கதவுகள் எப்பொழுதும் திறந்தவழியே இருக்கிறது. ஆகையினால் பேச்சுவார்த்தைகள் நிறைவு பெறவில்லை என்பதுடன் தொடர்ந்தும் முயற்சிகள் நடக்கிறது. நாங்கள் யாரையும் விலத்தவில்லை. மக்களுக்காக ஒன்றாகச் செல்ல தான் விரும்புகிறோம். ஆகையினால். நிச்சயமாக இணைவோம் என்ற நம்பிக்கை கூட எங்களுக்கு இருக்கிறது.
இன்றைக்கு உண்மையில் மாற்றத்தை வேண்டுகின்ற மக்கள் தரப்புக்கள் தலைவர்கள் எல்லாம் என பலரும் எங்கள் எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டுமென்றே விரும்புகின்றனர். அதற்கமைய கூட்டணியையும் முன்னணியையும் இணைத்த ஒரு பாதையில் செல்ல பல தரப்புக்கள் முயற்சிக்கின்றனர். அதனால் பலர் தாமே அதனை விரும்பிச் செய்கின்றனர்.
இவ்வாறாக பல கட்சிகள் அமைப்புக்களுடன் பெச்சுக்களில் இணக்கம் காணப்பட்டு நிறைவு பெற்றிருக்கின்றது. அதேபோல ஏனையவர்களையும் இணைப்பதற்கான பேச்சுக்கள் நடக்கிறது. நாங்கள் கொள்கை வழியில் சேர்ந்து வருகின்றதன் பின்னர் உடன்படிக்கை செய்வோம். அதே நேரம் எங்களுக்கு தேர்தல் தான் முக்கியமென்றும் இல்லை. மக்கள் நலன் தான் முக்கியமாக இருக்கிறது. அந்த வகையில் சரியான ஒற்றுமையான கூட்டணியை உருவாக்கவே விரும்புகின்றோம். அதனால் தேர்தலுக்காக அவசரப்பட்டு ஒரு கூட்டணியை உருவாக்கி கூட்டமைப்பு போல் நாங்கள் செல்ல விரும்பவில்லை ஒற்றுமையை ஏற்படுத்த பல முயற்சிகள் நடக்கிறது.
இதே வேளை புதிய கூட்டணயில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணையாதவிடத்து அல்லது இணைந்தாலும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகியனவும் இணைத்துக் கொள்ளப்படுமா என்றும் பேசப்படுகிறது. எங்களைப் பொறுத்தவரையில் முன்னணி எங்களுடன் இணையமாட்டார்கள் என்றில்லை. அவர்கள் எம்முடன் இணைய சாத்தியங்கள் இருக்கிறது. இணையவேண்டுமென்பது தான் கோரிக்கை. அது தான் எதிர்கால தமிழ் மக்கள் நலனுக்கு உகந்தது என்பதும் எங்களுடைய கருத்தாக இருக்கிறது.

ஆனால் கூட்டமைப்பை உடைக்க விரும்பவில்லை என்றும் அவ்வாறு உடைப்பதற்கான நோக்கமும் இல்லை என்று செயலாளர் நாயகம் சொல்லியுள்ளார். ஆனால் கூட்டமைப்பின் போக்குகள் ஏமாற்றுகின்ற செயற்பாடுகள் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை மிறிச் செயற்படுகின்ற தன்மைகள் இருக்கையில் அதற்கு உடன்படாத தலைவர்கள் அல்லது தொண்டர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்கள் உண்மையில் நேர்மையாக எங்களுடன் சேர்ந்த இயங்க வந்தால் நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.மேலும் தனிப்பட்ட மின்னஞ்சல்களை வெளிப்படுத்தவது அநாகரீகமான அரசியல் கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
தனக்குப்பின்னர் கூட்டணியின் தலைமைத்துவத்தை கஜேந்திரகுமார் ஏற்றுக்கொள்ளும்படி விக்னேஸ்வரன் தெரிவித்ததாக, அண்மையில் கஜேந்திரன் கூறியதில் துளியும் உண்மையில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ் மக்கள் கூட்டணி உருவாக்கப்பட்டு ஓராண்டை நெருங்கிக் கொண்டிருக்கின்ற இவ் வேளையில் எங்கள் கட்சியானது மெதுவாக என்றாலும் மிக உறுதியாக தன்னுடைய அரசியல் செயற்பாட்டைச் செய்து வருகின்றது. அந்த வகையில் எதிர்காலத்தில் எங்கள் கட்சியுடன் கொள்கை வழியில் கூட்டுச் சேர்வதற்கான கட்சிகள் மற்றும் அமைப்புக்களை நாங்கள் இணைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பது சகலரும் அறிந்த விடயம்.
இதில் நாங்கள் தெளிவான ஒரு நிலைப்பாட்டை இந்த இடத்தில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதாவது கொள்கை வழி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக இணைந்து செயற்படக் கூடிய கட்சிகளையும் அமைப்புக்களையும் நாங்கள் சேர்த்துக் கொள்கின்றோம். எதிர்காலத்திலும் அவ்வாறானவர்களைச் சேர்ப்பதற்காக எங்களினுடைய கட்சியின் கதவுகள் திறந்து இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக எங்கள் செயலாளர் நாயகம் குறிப்பிட்டது போல தமிழ் மக்கள் பேரவையில் கொள்கை ரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் இணைந்த குறிப்பாக எழுக தமிழ் விழிப்புணர்வுச் செயற்பாடுகளில் முக்கிய பங்கெடுத்த கட்சிகளை ஒன்றிணைத்து நாங்கள் முன்செல்கின்ற செயற்பாடுகளில் இப்பொழுதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இந்த வகையில் புதிதாக எங்களுடன் கொள்கை அடிப்படையில் இணைந்து தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்காக நேர்மையாகவும் துணிவுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படக் கூடியவர்களை எங்கள் கட்சியில் இணைந்து கொள்ளுமாறும் எங்களுடன் கூட்டுச் சேருமாறு எமது கட்சியின் செயலாளர் நாயகம் சார்பில் நான் அழைப்பு விடுத்துக் கொள்கின்றேன்.
ஏற்கனவே மக்களால் ஏகப் பிரதிநிதிகளாக ஒரு வகையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இன்று எந்த நிலைக்கு மக்களைக் கொண்டு வந்த விட்டிருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியும். உண்மையில் அவர்கள் அரசிற்கு விசுவாசமாக இருந்தார்களே ஒழிய எங்கள் மக்களுக்கு விஸ்வாசமாக இருக்கவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு விஸ்வாசமாக இருக்கவில்லை.
இதன் காரணமாகத் தான் ஒரு நேர்மையான ஒரு அர்ப்பணிப்புடைய எங்கள் கடந்த கால நிகழ்வுகளுக்கான அர்ப்பணிப்புகளுக்கான தியாகங்களுக்கான நிச்சயமாக ஒரு விடையைப் பெறும் நோக்கில் செயலாளர் நாயகம் அவர்கள் புதிய பண்புள்ள அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்தும் அடிப்படையில் இந்தக் கட்சியை அவர் தொடங்கியிருக்கின்றார். அதே போல நாங்கள் எதிர்காலத்திலும் நேர்மையான அரசியல் கலாச்சாரத்தை கொண்டு செல்வோம். நிச்சயமாக விக்கினேஸ்வரன் ஒரு நீதியரசர் மட்டுமல்லாமல் அவர் ஒரு ஆன்மீக வாதி என்ற அடிப்படையில் மக்களுக்கு கொடுத்த அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக தன்னாலானதை மக்களுக்கு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செய்வார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
கட்சியின் சார்பாக குறிப்பாக செயலாளர் நாயகம் சார்பாக அனைத்து தர்ப்பினர்களும் இந்தக் கூட்டணியில் இணைந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு ஒன்று சேருமாறு இருகரம் கூப்பி வரவேற்போம். அவர்களுக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. நாங்கள் எங்களுடன் இணைபவர்களுக்கு எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்கவில்லை.
அதே போலவே எங்களுடன் இணை வருபவர்களும் நிபந்தனை வதிப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவதும் இல்லை. அந்த வகையில் எங்களுடைய ஒன்றிணைவானது ஒரு சமரச அடிப்படையில் இருக்குமென்பதை இந்த இடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம். இதே வேளை எங்களது கூட்டணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைவதாயின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்துக் கொள்ளக் கூடாதென நிபந்தனை விதித்துள்ளதாக கூறுகின்றீர்கள்.
இந்த விடயம் தொடர்பாக எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கட்சியின் செயலாளர் நாயகம் விக்கினேஸ்வரன் ஐயாவினால் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது கொள்கைவழி நின்று செயற்படக் கூடிய அனைவரையுமே இணைத்து எங்கள் கட்சி முன் செல்ல வரும்புகின்றது என் கூறியிருக்கின்றோம்..
ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவையிலுமம் இணைந்து அதற்கும் மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எங்களுடன் சேர்ந்த ஒரு கொள்கைவழி செயற்படுவதற்குத் தயாராக இருக்கிறது. அதனால் தான் அவர்களுடன் சேர்ந்த செய்படுவது தொடர்பான பேச்சுக்கள் நடக்கின்றன. அதே போல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட பல கட்சிகள் அமைப்புக்களை இணைத்து கொள்கை வழியில் எல்லோரும் சேர்ந்து செல்லவே நாங்கள் விரும்புகின்றோம்.
ஆகையினால் அவர் சரியில்லை. இவர் சரியில்லை என்று விலத்தி வைக்க நாங்கள் விரும்பவில்லை. அந்த வகையில் தொடர்ந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உட்பட இதர கட்சிகள் அமைப்புக்களை இணைத்தக் கொள்ளத் தயாராக இருக்கின்றொம்.
நாங்கள் எங்கள் கட்சியினுடைய ஒன்றிணைந்த பயணத்தில் எங்களுடன் சேர்பவர்கள் நிபந்தனைகளை விதிப்பதையும் அதற்கேற்ப எங்கள் கட்சியின் செயற்பாடுகளையும் கொள்கைகளையோ தீர்மானங்களை மாற்றுவதற்கோ நாங்கள் தயாராக இல்லை. ஏற்கனவே கட்சி முடிவுகள் இருக்கிறது. மக்கள் விருப்பங்கள் இருக்கிறது. அதற்கமைய நடந்து கொண்டு செல்வோம். ஆகவே எங்களுடன் சேர்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிபந்தனை விதித்தால் அந்தக் கூட்ட பலம் மிக்க கூட்டாக இருக்க முடியாது.
மேலும் கூட்டணியின் தலைமைத்துவம் விக்னேஸ்வரன் ஐயாவிற்கு பின்னர் கஜேந்திரகுமார் பொன்னப்பலத்திற்கு வழங்குவதற்கு எழுத்து மூல உத்தரவாதம் வழங்கப்பட்டதாக கூறப்படுவதில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை. வழங்பப்பட்டதாக கூறுவது தவறான கருத்தாகும். ஆனால் எங்கள் கட்சியின் செயலாளர் நாயகம் நேரடியாக மின்னஞ்சல் வழியாக கஜேந்திருகுமாருக்கு பல விடயங்களை தெரிவித்திருக்கின்றார். இதுவரையில் அவ்வாறான கடிதங்களுக்கு கஜேந்திரகுமார் எந்தவிதமான பதில்களையும் வழங்கவில்லை என்று எம்மால் கூற முடியும்.
அதற்கு மேலாக மற்றப்படி வெளியில் நடக்கின்ற அல்லது சொல்லப்படுகின்ற விடயங்கள் அல்லது செய்திகளின் உண்மைத்தன்மை என்ன என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் அவ்வாறான கருத்துதக்கள் தொடர்பில் நேரடியாக எந்தவித பேச்சுக்களிலும் ஈடுபடவில்லை . அவ்வாறு இடபட்டிருந்தால் தானே அதைப்பற்றிக் கதைக்கலாம். இப்ப எங்களுக்கு மக்கள் நலன்களுக்காக கட்சிகள் இணைவதே தேவையாக இருக்கிறது. தேர்தல்கள் வருகின்ற போது அதன் பின்னர் தான் அது சம்மந்தமாக ஒரு சமரசத்திற்கு வரலாம். ஆக இப்பொழுது அடுத்த தலைமைத்துவம் தொடர்பில் எந்தவிமாகவும் கதைக்கவும் இல்லை. எதனையும் சொல்லவும் இல்லை. வழங்கப்பட்டதாக கூறுவது தவறான கருத்து.
இவ்வாறான பல கருத்தக்கள் வெளிவருகின்ற நிலையில் பேசித் தீர்ப்பதே சிற்நதது என்று கருதுகின்றோம். அவ்வாறான பேச்சுசுவார்த்தைக்கு நாங்கள் தயார். அதற்கான அழைப்பையும் விடுத்துள்ளோம். அதற்கமைய பேச்சுக்கு அவர்கள் வர வேண்டுமென்றும் விரும்புகின்றோம். அவ்வாறு வந்தால் தானே பல விடயங்கள் தொடர்பிலும் கதைக்கலாம். ஆக மொத்தத்தில் பேச்சுவார்த்தைக்கான எங்கள் கதவுகள் எப்பொழுதும் திறந்தவழியே இருக்கிறது. ஆகையினால் பேச்சுவார்த்தைகள் நிறைவு பெறவில்லை என்பதுடன் தொடர்ந்தும் முயற்சிகள் நடக்கிறது. நாங்கள் யாரையும் விலத்தவில்லை. மக்களுக்காக ஒன்றாகச் செல்ல தான் விரும்புகிறோம். ஆகையினால். நிச்சயமாக இணைவோம் என்ற நம்பிக்கை கூட எங்களுக்கு இருக்கிறது.
இன்றைக்கு உண்மையில் மாற்றத்தை வேண்டுகின்ற மக்கள் தரப்புக்கள் தலைவர்கள் எல்லாம் என பலரும் எங்கள் எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டுமென்றே விரும்புகின்றனர். அதற்கமைய கூட்டணியையும் முன்னணியையும் இணைத்த ஒரு பாதையில் செல்ல பல தரப்புக்கள் முயற்சிக்கின்றனர். அதனால் பலர் தாமே அதனை விரும்பிச் செய்கின்றனர்.
இவ்வாறாக பல கட்சிகள் அமைப்புக்களுடன் பெச்சுக்களில் இணக்கம் காணப்பட்டு நிறைவு பெற்றிருக்கின்றது. அதேபோல ஏனையவர்களையும் இணைப்பதற்கான பேச்சுக்கள் நடக்கிறது. நாங்கள் கொள்கை வழியில் சேர்ந்து வருகின்றதன் பின்னர் உடன்படிக்கை செய்வோம். அதே நேரம் எங்களுக்கு தேர்தல் தான் முக்கியமென்றும் இல்லை. மக்கள் நலன் தான் முக்கியமாக இருக்கிறது. அந்த வகையில் சரியான ஒற்றுமையான கூட்டணியை உருவாக்கவே விரும்புகின்றோம். அதனால் தேர்தலுக்காக அவசரப்பட்டு ஒரு கூட்டணியை உருவாக்கி கூட்டமைப்பு போல் நாங்கள் செல்ல விரும்பவில்லை ஒற்றுமையை ஏற்படுத்த பல முயற்சிகள் நடக்கிறது.
இதே வேளை புதிய கூட்டணயில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணையாதவிடத்து அல்லது இணைந்தாலும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகியனவும் இணைத்துக் கொள்ளப்படுமா என்றும் பேசப்படுகிறது. எங்களைப் பொறுத்தவரையில் முன்னணி எங்களுடன் இணையமாட்டார்கள் என்றில்லை. அவர்கள் எம்முடன் இணைய சாத்தியங்கள் இருக்கிறது. இணையவேண்டுமென்பது தான் கோரிக்கை. அது தான் எதிர்கால தமிழ் மக்கள் நலனுக்கு உகந்தது என்பதும் எங்களுடைய கருத்தாக இருக்கிறது.

ஆனால் கூட்டமைப்பை உடைக்க விரும்பவில்லை என்றும் அவ்வாறு உடைப்பதற்கான நோக்கமும் இல்லை என்று செயலாளர் நாயகம் சொல்லியுள்ளார். ஆனால் கூட்டமைப்பின் போக்குகள் ஏமாற்றுகின்ற செயற்பாடுகள் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை மிறிச் செயற்படுகின்ற தன்மைகள் இருக்கையில் அதற்கு உடன்படாத தலைவர்கள் அல்லது தொண்டர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்கள் உண்மையில் நேர்மையாக எங்களுடன் சேர்ந்த இயங்க வந்தால் நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.மேலும் தனிப்பட்ட மின்னஞ்சல்களை வெளிப்படுத்தவது அநாகரீகமான அரசியல் கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.