இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு கழிவுகள் அனுப்பப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தமிழர்களான இரண்டு சகோதரர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. சச...
இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு கழிவுகள் அனுப்பப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தமிழர்களான இரண்டு சகோதரர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
சசிகுமாரன் முத்துராமருக்குச் சொந்தமான சிலோன் மெட்டல் பிராசசிங் கார்ப்பரேஷன் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கழிவு கொள்கலன்கள் இங்கிலாந்தில் உள்ள வெங்கட்ஸ் லிமிடெட் என அழைக்கப்படும் அவரது தம்பி முத்துராமர் வெங்கடேஷுக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தால் அனுப்பப்பட்டன.
ஜனவரி 01, 2018 முதல் முத்துராமர் வெங்கடேஷ், வெங்கட்ஸ் லிமிடெட் இயக்குநராக இருந்து தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவருக்கு பதிலாக சிலோன் மெட்டல் பிராசசிங் கோர்ப்பரேஷன் (பிரைவேட்) லிமிடெட் உரிமையாளர் முத்துராமர் சசிகுமாரன் தானே பதவியேற்றார்.
அதன்படி, கழிவுகளை ஏற்றுமதி செய்த நிறுவனம் மற்றும் கழிவுகளை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையை முத்துராமர் சசிகுமாரன் வைத்திருக்கிறார்.
நியமனம் குறித்த விவரங்கள் பின்வருமாறு.

ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் கழிவுப்பொருட்களை துணி அடிப்படையிலான கழிவு என்று நன்கு அறிந்திருந்தனர் என்பது தெளிவாகிறது.

சகோதரர்கள் இருவரும் கழிவுகளை வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்து, ஆசிய நாடுகளில் கொட்டுவதற்கு இப்படியான நிறுவனங்களை நடத்துகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.