புனரமைக்கப்பட்டு வரும் பலாலி விமான நிலையம், பிராந்திய விமான நிலையமாக எதிர்வரும் ஒக்ரோபர் 15ம் திகதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று அல...
புனரமைக்கப்பட்டு வரும் பலாலி விமான நிலையம், பிராந்திய விமான நிலையமாக எதிர்வரும் ஒக்ரோபர் 15ம் திகதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று அலரி மாளிகையில் நடந்த கலந்துரையாடலில் இந்த முடிவு எட்டப்பட்டது.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளின் தற்போதை நிலை, மற்றும் ஏனைய அமைச்சுக்களுடன் தொடர்புடைய சிக்கல்களை ஆராய இன்று அலரி மாளிகையில் கூட்டமொன்று கூட்டப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டர். மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கட்டுமான பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் முடிக்கப்படவில்லை என்பதை அர்ஜூன சுட்டிக்காட்டினார். இதுவரை 30 வீதமான அபிவிருத்தி பணிகளே முடிக்கப்பட்டுள்ளதாகவும், நீர், மின்சார இணைப்புக்கள் ஏற்படுத்தப்படாததையும் சுட்டிக்காட்டினார். குடிவரவு, குடியகல்வு அலுவலகம், சுங்கம் மற்றும் இதர அலுவலகங்களின் கட்டுமான பணிகள் நடந்து வருவதை அமைச்சர் விபரித்தார்.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புசபையால் இனம்காணப்பட்ட நீர் ஆதாரம், விமான நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்துள்ளதால், நீரை பெற்றுக்கொள்வதில் சிரமமிருப்பதை அர்ஜூன சுட்டிக்காட்டினார்.
கடற்படையின் உதவியுடன் கடல்நீரை சுத்திகரித்து விமான நிலைய பயன்பாட்டிற்கு பெற்றுக்கொள்ளும் யோசனையை இதன்போது பிரதமர் முன்மொழிந்துள்ளார்.
2250 மில்லியன் ரூபா செலவில் இரண்டு கட்டங்களாக பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு வருகிறது. 300 மில்லியன் ரூபாவை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. முதற்கட்ட புனரமைப்பின் பின், இந்தியாவின் முக்கிய நகரங்களிற்கு பிராந்திய விமான நிலையமாக சேவையை ஆரம்பிக்கும். இரண்டாம் கட்ட புனரமைப்பு பணியின் பின் சர்வதேச விமான நிலையமாக செயற்படும்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளின் தற்போதை நிலை, மற்றும் ஏனைய அமைச்சுக்களுடன் தொடர்புடைய சிக்கல்களை ஆராய இன்று அலரி மாளிகையில் கூட்டமொன்று கூட்டப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டர். மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கட்டுமான பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் முடிக்கப்படவில்லை என்பதை அர்ஜூன சுட்டிக்காட்டினார். இதுவரை 30 வீதமான அபிவிருத்தி பணிகளே முடிக்கப்பட்டுள்ளதாகவும், நீர், மின்சார இணைப்புக்கள் ஏற்படுத்தப்படாததையும் சுட்டிக்காட்டினார். குடிவரவு, குடியகல்வு அலுவலகம், சுங்கம் மற்றும் இதர அலுவலகங்களின் கட்டுமான பணிகள் நடந்து வருவதை அமைச்சர் விபரித்தார்.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புசபையால் இனம்காணப்பட்ட நீர் ஆதாரம், விமான நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்துள்ளதால், நீரை பெற்றுக்கொள்வதில் சிரமமிருப்பதை அர்ஜூன சுட்டிக்காட்டினார்.
கடற்படையின் உதவியுடன் கடல்நீரை சுத்திகரித்து விமான நிலைய பயன்பாட்டிற்கு பெற்றுக்கொள்ளும் யோசனையை இதன்போது பிரதமர் முன்மொழிந்துள்ளார்.
2250 மில்லியன் ரூபா செலவில் இரண்டு கட்டங்களாக பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு வருகிறது. 300 மில்லியன் ரூபாவை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. முதற்கட்ட புனரமைப்பின் பின், இந்தியாவின் முக்கிய நகரங்களிற்கு பிராந்திய விமான நிலையமாக சேவையை ஆரம்பிக்கும். இரண்டாம் கட்ட புனரமைப்பு பணியின் பின் சர்வதேச விமான நிலையமாக செயற்படும்.