அடுத்த ஜனாதிபதி தேர்தலை நவம்பர் 16ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ம் திகதி முதல் டிசம்பர் 7ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்த...
அடுத்த ஜனாதிபதி தேர்தலை நவம்பர் 16ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 15ம் திகதி முதல் டிசம்பர் 7ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த நிலையிலேயே நவம்பர் 16ம் திகதியை மைத்திரி தரப்பு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒக்ரோபர் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும்.
இதேவேளை, இந்த தேர்தலின் பின்னரும் அரசியலில் தொடர்வதற்கான முயற்சிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்து வருகிறார். பொதுஜன பெரமுன கூட்டணியில் மைத்திரிக்கு உயர் பதவிகள் வழங்க மறுக்கப்பட்ட நிலையில், ஐ.தே.க கூட்டணியில் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வதற்கு மைத்திரி முயற்சித்து வருகிறார்.
இதன்படி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கி, மைத்திரி பிரதமராகும் பேச்சுக்கள் நடந்து வருகிறது.
ஐ.தே.கவிற்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தற்போது நடக்கும் குழப்பங்கள் முடிந்ததும், அந்த கட்சியுடன் சிறிலங்க சுதந்திரக்கட்சி கூட்டணி வைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
ஐ.தே.கவுடன் கூட்டணி அமைக்க முடியாவிட்டாலும், சஜித் தரப்புடன் கூட்டணி அமைக்க பேச்சு நடந்து வருகிறது. சஜித்- மைத்திரி கூட்டணியின் பின்னணியில் அமை்சர் மங்கள சமரவீர செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் மைத்திரிபாலவுடன், சஜித்தின் தாயார் ஹேமா பிரேமதாசா பேச்சு நடத்தியுள்ளார்.
சுதந்திரக்கட்சியின் ஒரு பகுதியினர்- மஹிந்த சமரவீர தலைமையில்- ஐ.தே.கவில் இணைய ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சி உடைவதை தடுக்கவே மைத்திரி தரப்பு இந்த முயற்சியை எடுப்பதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுக்களில், ஐ.தே.க தரப்பின ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டியிட்டால், பிரதமராக மைத்திரி நியமிக்கப்பட வேண்டுமென சு.க தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரியவருகிறது.
நவம்பர் 15ம் திகதி முதல் டிசம்பர் 7ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த நிலையிலேயே நவம்பர் 16ம் திகதியை மைத்திரி தரப்பு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒக்ரோபர் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும்.
இதேவேளை, இந்த தேர்தலின் பின்னரும் அரசியலில் தொடர்வதற்கான முயற்சிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்து வருகிறார். பொதுஜன பெரமுன கூட்டணியில் மைத்திரிக்கு உயர் பதவிகள் வழங்க மறுக்கப்பட்ட நிலையில், ஐ.தே.க கூட்டணியில் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வதற்கு மைத்திரி முயற்சித்து வருகிறார்.
இதன்படி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கி, மைத்திரி பிரதமராகும் பேச்சுக்கள் நடந்து வருகிறது.
ஐ.தே.கவிற்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தற்போது நடக்கும் குழப்பங்கள் முடிந்ததும், அந்த கட்சியுடன் சிறிலங்க சுதந்திரக்கட்சி கூட்டணி வைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

ஐ.தே.கவுடன் கூட்டணி அமைக்க முடியாவிட்டாலும், சஜித் தரப்புடன் கூட்டணி அமைக்க பேச்சு நடந்து வருகிறது. சஜித்- மைத்திரி கூட்டணியின் பின்னணியில் அமை்சர் மங்கள சமரவீர செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் மைத்திரிபாலவுடன், சஜித்தின் தாயார் ஹேமா பிரேமதாசா பேச்சு நடத்தியுள்ளார்.
சுதந்திரக்கட்சியின் ஒரு பகுதியினர்- மஹிந்த சமரவீர தலைமையில்- ஐ.தே.கவில் இணைய ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சி உடைவதை தடுக்கவே மைத்திரி தரப்பு இந்த முயற்சியை எடுப்பதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுக்களில், ஐ.தே.க தரப்பின ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டியிட்டால், பிரதமராக மைத்திரி நியமிக்கப்பட வேண்டுமென சு.க தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரியவருகிறது.