நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றாக வாழக்கூடிய மனித வளங்களின் ஊடாக பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தான் எதிர்பார்ப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதி...
நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றாக வாழக்கூடிய மனித வளங்களின் ஊடாக பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தான் எதிர்பார்ப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளரை அறிவிப்பதற்காக மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் சிவில் அமைப்புக்கள் 28 உடன் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தன்னை வேட்பாளராக தெரிவு செய்தமைக்கு தேசிய மக்கள் சக்திக்கு தான் நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் அனைவரும் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதைக்க மாட்டேன் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டம் நிச்சயமாக வெற்றியில் முடியும் என்பதை தான் தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டினுள் சிறந்த அரசியலை கட்டி எழுப்புவதாக தான் மக்களுக்கு வாக்குறுதி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இளைஞர்களின் எண்ணங்கள் அடைப்படையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய திட்டங்களை தாங்கள் உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அனைவரும் மாற்றமடைய வேண்டும் எனவும் அதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளரை அறிவிப்பதற்காக மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் சிவில் அமைப்புக்கள் 28 உடன் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தன்னை வேட்பாளராக தெரிவு செய்தமைக்கு தேசிய மக்கள் சக்திக்கு தான் நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் அனைவரும் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதைக்க மாட்டேன் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டம் நிச்சயமாக வெற்றியில் முடியும் என்பதை தான் தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டினுள் சிறந்த அரசியலை கட்டி எழுப்புவதாக தான் மக்களுக்கு வாக்குறுதி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இளைஞர்களின் எண்ணங்கள் அடைப்படையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய திட்டங்களை தாங்கள் உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அனைவரும் மாற்றமடைய வேண்டும் எனவும் அதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.