நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா முழக்கத்து...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் இன்று காலை 7.20 மணியளவில் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து, பக்தர்களிற்கு அருள்பாலிக்க ஆரம்பித்தார்.
பாதுகாப்பு நெருக்கடிகள் இருந்த போதும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் நல்லூரில் கூடினர்.
நாளை 25வது திருவிழா தீர்த்தோற்சவமாகும். மறுநாள் பூங்காவனத் திருவிழா இடம்பெறும். 27ம் திருவிழா வைரவர் சாந்தியுடன் நல்லூர் பெருந்திருவிழா முடிவடையும்.