மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கள்ளியங்காட்டில் புதைக்கப்பட்டுள்ள தற்கொலைதாரியின் எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்க...
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கள்ளியங்காட்டில் புதைக்கப்பட்டுள்ள தற்கொலைதாரியின் எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது என மட்டக்களப்பு மாநகரசபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு நேற்று (29) மாலை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
குண்டுதாரியின் எச்சங்களை மாநகரசபையின் எந்த அனுமதியும் பெறப்படாமல் மாநகரசபையின் அதிகாரத்திற்குட்பட்ட இந்து மயானத்தில் புதைத்ததற்கு கண்டனம் தெரிவித்த மாநகர முதல்வர், அந்த மனித எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸ் நிலையத்தில் எழுத்துமூல முறைப்பாட்டினை செய்து அதன் ஊடாக நீதிமன்ற கட்டளையினைப்பெற்று, எச்சங்களை அகற்றுவது தொடர்பான பிரேரணையை நிறைவேற்றுவதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார்.
கள்ளியங்காட்டில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியின் எச்சங்கள் புதைக்கப்பட்டதற்கு மாநகரசபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
அத்துடன் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதல்கள் குறித்தும் உறுப்பினர்கள் சிலர் உரையாற்றினர்.
இதேநேரம் இந்த அமர்வின்போது மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா உரையாற்ற முற்பட்டபோது சுயேட்சை குழுவின் மாநகரசபை உறுப்பினர் திலிப்குமார் குறுக்கிட்டதை தொடர்ந்து மாநகரசபை உறுப்பினர்களிடையே கடுமையான வாய்தர்க்கம் ஏற்பட்டது.

அதனையடுத்து மாநகரசபை முதல்வர் மற்றும் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ந.திலிப்குமார், ஈபிடிபி கட்சியை சேர்ந்த சிவானந்தராஜா, தமிழர் விடுதலைக்கூட்டணியை சேர்ந்த வ.குபேரன் ஆகியோர் சபையினை விட்டு வெளியேறிச்சென்றனர்.
அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மாநகரசபையின் அனுமதியில்லாது இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட மனித வெடிகுண்டின் உடல் எச்சங்களை சட்ட நடவடிக்கை ஊடாக மீண்டும் தோண்டியெடுத்து வேறு இடங்களில் புதைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு நேற்று (29) மாலை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
குண்டுதாரியின் எச்சங்களை மாநகரசபையின் எந்த அனுமதியும் பெறப்படாமல் மாநகரசபையின் அதிகாரத்திற்குட்பட்ட இந்து மயானத்தில் புதைத்ததற்கு கண்டனம் தெரிவித்த மாநகர முதல்வர், அந்த மனித எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸ் நிலையத்தில் எழுத்துமூல முறைப்பாட்டினை செய்து அதன் ஊடாக நீதிமன்ற கட்டளையினைப்பெற்று, எச்சங்களை அகற்றுவது தொடர்பான பிரேரணையை நிறைவேற்றுவதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார்.
கள்ளியங்காட்டில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியின் எச்சங்கள் புதைக்கப்பட்டதற்கு மாநகரசபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
அத்துடன் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதல்கள் குறித்தும் உறுப்பினர்கள் சிலர் உரையாற்றினர்.
இதேநேரம் இந்த அமர்வின்போது மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா உரையாற்ற முற்பட்டபோது சுயேட்சை குழுவின் மாநகரசபை உறுப்பினர் திலிப்குமார் குறுக்கிட்டதை தொடர்ந்து மாநகரசபை உறுப்பினர்களிடையே கடுமையான வாய்தர்க்கம் ஏற்பட்டது.

அதனையடுத்து மாநகரசபை முதல்வர் மற்றும் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ந.திலிப்குமார், ஈபிடிபி கட்சியை சேர்ந்த சிவானந்தராஜா, தமிழர் விடுதலைக்கூட்டணியை சேர்ந்த வ.குபேரன் ஆகியோர் சபையினை விட்டு வெளியேறிச்சென்றனர்.
அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மாநகரசபையின் அனுமதியில்லாது இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட மனித வெடிகுண்டின் உடல் எச்சங்களை சட்ட நடவடிக்கை ஊடாக மீண்டும் தோண்டியெடுத்து வேறு இடங்களில் புதைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.