வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படவில்லை. அவ்வாறு கொட்டப்படுவதாக இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆகவே கழிவுகள்...
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படவில்லை. அவ்வாறு கொட்டப்படுவதாக இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆகவே கழிவுகள் கொட்டப்படுவதாகச் சொல்வது உண்மைக்கு மாறானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்த கொண்டிருந்த மாவை சேனாதிராசாவிடம் வலிவடக்குப் பகுதியில் கழிவுகள் கொடட்டப்படுவது தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையெ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
வலிகாமம் வடக்கில் கழீவுகள் கொட்டப்படுவதாக சொல்லப்பட்டாலும் நாங்கள் அறிந்த வகையில் அங்கு கழிவுகள் கொட்டப்படுவதாக இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனாலும் அங்கிருந்த சிமெந்து தொழிற்சாலை கிடங்குகளை நிரப்புவதற்காக குப்பைகள் கொட்டப்படுகிறதே தவிர வேறு எந்தக் கழிவுகளும் அங்கெ கொட்டப்படுவதாக நான் அறிந்திருக்கவில்லை.
ஆகவே மருத்துவக் கழிவுகள் அங்கு கொட்டப்படுவதாகச் சொல்வது உண்மைக்கு மாறானது என்பது தான் என்னுடைய அபிப்பிராயம். ஆகவே இது விடயம் சம்மந்தமாக ஆராய்ந்து கொண்டதன் பின்னர் பிரதேச சபை உரிய நடவடிக்கை எடுக்கும்.
அங்கே எதைக் கொட்டியிருக்கின்றனர் என்று எங்களுக்கு தெளிவாகத் தெரியாது. ஆகவே குப்பைகள் கழீவுகள் கொட்டுவதற்கு அங்கே இடமிருக்காது என ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையினால் இங்கு கொண்டுவந்து குப்பைகளைக் கொட்ட வேண்டிய அவசியமும் கிடையாது.
மேலும் வெளிநாடகளில் இருந்து கழிவகளை இங்கே அனுப்பியது என்பதெல்லாமல் பெரிய சர்ச்சைக்குரியதாக இருக்கின்றது. கழிவுகள் கொட்டுவதற்கான இடமல்ல வலிவடக்குப் பிரதேசம். அது எந்தப் பிரதேசமாக இருந்தாலும் அவ்வாறு செய்ய முடியாது.
குப்பைகள் ஒவ்வொரு பிரதேச நகர சபைகளிலும் இருக்கின்றது. அதனை அகற்றுவதில் இட நெருக்கடி இருக்கிறது.. அதற்காக விலவடக்கில் கொண்டு வந்து குப்பைகள் கொட்டுவதென்பதெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகள் தான்.
மேலும் அங்கிருந்த சிமெந்து தொழிற்சாலை திரும்ப அதிலே இயங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாததால் சீமெந்து தொழிற்சாலை பிரதேசத்தில் தொழிற்பேட்டைகள் தொழில் நுட்ப நிறுவனங்களை உருவாக்கி வேலைவாய்ப்புக்களை வழங்கக் கூடியதாக தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்கான அமைச்சரவைப் பத்திரமும் தயாராக இருக்கின்றது.
அதனைவிட அங்கெ இருக்கின்ற கிடங்குகளும் நிரப்பபட வேண்டும். அங்கேயும் அந்த நிலத்தை நாங்கள் எதிர்கால அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும். என்ற தீர்மானம் இப்போது இருக்கின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எங்களுக்கும் இடையே இருக்கின்ற உடன்பாடு ஆகும். ஆனபடியால் ஏனைய விடயங்கள் தொடர்பில் என்ன நடக்கின்றது என்று பார்த்து ஆராய்ந்து நாங்கள் பதில் சொல்லுவோம் என்றார்.

யாழில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்த கொண்டிருந்த மாவை சேனாதிராசாவிடம் வலிவடக்குப் பகுதியில் கழிவுகள் கொடட்டப்படுவது தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையெ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
வலிகாமம் வடக்கில் கழீவுகள் கொட்டப்படுவதாக சொல்லப்பட்டாலும் நாங்கள் அறிந்த வகையில் அங்கு கழிவுகள் கொட்டப்படுவதாக இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனாலும் அங்கிருந்த சிமெந்து தொழிற்சாலை கிடங்குகளை நிரப்புவதற்காக குப்பைகள் கொட்டப்படுகிறதே தவிர வேறு எந்தக் கழிவுகளும் அங்கெ கொட்டப்படுவதாக நான் அறிந்திருக்கவில்லை.
ஆகவே மருத்துவக் கழிவுகள் அங்கு கொட்டப்படுவதாகச் சொல்வது உண்மைக்கு மாறானது என்பது தான் என்னுடைய அபிப்பிராயம். ஆகவே இது விடயம் சம்மந்தமாக ஆராய்ந்து கொண்டதன் பின்னர் பிரதேச சபை உரிய நடவடிக்கை எடுக்கும்.
அங்கே எதைக் கொட்டியிருக்கின்றனர் என்று எங்களுக்கு தெளிவாகத் தெரியாது. ஆகவே குப்பைகள் கழீவுகள் கொட்டுவதற்கு அங்கே இடமிருக்காது என ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையினால் இங்கு கொண்டுவந்து குப்பைகளைக் கொட்ட வேண்டிய அவசியமும் கிடையாது.
மேலும் வெளிநாடகளில் இருந்து கழிவகளை இங்கே அனுப்பியது என்பதெல்லாமல் பெரிய சர்ச்சைக்குரியதாக இருக்கின்றது. கழிவுகள் கொட்டுவதற்கான இடமல்ல வலிவடக்குப் பிரதேசம். அது எந்தப் பிரதேசமாக இருந்தாலும் அவ்வாறு செய்ய முடியாது.
குப்பைகள் ஒவ்வொரு பிரதேச நகர சபைகளிலும் இருக்கின்றது. அதனை அகற்றுவதில் இட நெருக்கடி இருக்கிறது.. அதற்காக விலவடக்கில் கொண்டு வந்து குப்பைகள் கொட்டுவதென்பதெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகள் தான்.
மேலும் அங்கிருந்த சிமெந்து தொழிற்சாலை திரும்ப அதிலே இயங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாததால் சீமெந்து தொழிற்சாலை பிரதேசத்தில் தொழிற்பேட்டைகள் தொழில் நுட்ப நிறுவனங்களை உருவாக்கி வேலைவாய்ப்புக்களை வழங்கக் கூடியதாக தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்கான அமைச்சரவைப் பத்திரமும் தயாராக இருக்கின்றது.
அதனைவிட அங்கெ இருக்கின்ற கிடங்குகளும் நிரப்பபட வேண்டும். அங்கேயும் அந்த நிலத்தை நாங்கள் எதிர்கால அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும். என்ற தீர்மானம் இப்போது இருக்கின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எங்களுக்கும் இடையே இருக்கின்ற உடன்பாடு ஆகும். ஆனபடியால் ஏனைய விடயங்கள் தொடர்பில் என்ன நடக்கின்றது என்று பார்த்து ஆராய்ந்து நாங்கள் பதில் சொல்லுவோம் என்றார்.