பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல்லை ஜனாதிபதி மைத்திரிபால இன்று நாட்டினார். நாட்டுக்கான ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ...
நாட்டுக்கான ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, முதல் நிகழ்வாக பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டினார். அத்துடன், அபிவிருத்தி பணிகளையும் தொடங்கி வைத்தார்.

175 மில்லியன் ரூபா செலவில் இரண்டு வருடங்களில் அமைக்கப்படவுள்ள இந்த துறைமுகத்தில் 500 மீன்பிடி படகுகளை நிறுத்த வசதியேற்படுத்தப்படும்.
வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், அமைச்சர் பீ.ஹரீசன், காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.



அத்துடன், அண்மைய ஜனாதிபதியுடனான சந்திப்பை தவிர்த்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களும் இன்று நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.