ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார். குடாநாட்டின் நீண்டகால முதன்மைப் பிரச்சனைகளில் ஒன்றான குடிநீர் பிரச...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார்.
குடாநாட்டின் நீண்டகால முதன்மைப் பிரச்சனைகளில் ஒன்றான குடிநீர் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வை பெறும் நோக்கில் அமைக்கப்படவுள்ள, மாற்று குடிநீர் திட்டத்தின் முக்கிய அங்கமான வல்லை குளத்திற்கான அடிக்கல்லை ஜனாதிபதி நாட்டுவார்.
சுமார் 4 ஆண்டு கட்டுமான பணியின் பின் குள அமைப்பு பூரணமாகும். இதன்பின்னர் வல்லை நீரேரியில் சேரும் நீரை குளத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து நீர் சுத்திகரிக்கப்பட்டு, பாவனைக்கு வழங்கப்படும்.
இதேவேளை, பருத்தித்துறை துறைமுகத்திற்கான அடிக்கல்லையும் ஜனாதிபதி நாட்டுவார்.
இதுதவிர நல்லூர் கந்தன் வழிபாடு உள்ளிட்ட வேறு பல நிகழ்வுகளிலும் ஜனாதிபதி கலந்து கொள்வார்.
ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு, முன்னெப்பொழுதும் இல்லாதளவில் குடாநாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகள் இடம்பெறும் இடங்கள், போக்குவரத்து பாதையென்பவற்றில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிறிய இடைவெளியில் வீதியின் இருமருங்கிலும் நேற்று மதியம் முதல் இராணுவத்தினரின் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதுதவிர, ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வு பகுதிகள் முழுமையாக இராணுவத்தின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை அண்மித்த வீதிகள், குச்சொழுங்கைகள் எல்லாம் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், ஜனாதிபதி கொலை சதி முயற்சி தகவல்களின் பின்னர் இந்த உயர் அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.:

குடாநாட்டின் நீண்டகால முதன்மைப் பிரச்சனைகளில் ஒன்றான குடிநீர் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வை பெறும் நோக்கில் அமைக்கப்படவுள்ள, மாற்று குடிநீர் திட்டத்தின் முக்கிய அங்கமான வல்லை குளத்திற்கான அடிக்கல்லை ஜனாதிபதி நாட்டுவார்.
சுமார் 4 ஆண்டு கட்டுமான பணியின் பின் குள அமைப்பு பூரணமாகும். இதன்பின்னர் வல்லை நீரேரியில் சேரும் நீரை குளத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து நீர் சுத்திகரிக்கப்பட்டு, பாவனைக்கு வழங்கப்படும்.
இதேவேளை, பருத்தித்துறை துறைமுகத்திற்கான அடிக்கல்லையும் ஜனாதிபதி நாட்டுவார்.
இதுதவிர நல்லூர் கந்தன் வழிபாடு உள்ளிட்ட வேறு பல நிகழ்வுகளிலும் ஜனாதிபதி கலந்து கொள்வார்.
ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு, முன்னெப்பொழுதும் இல்லாதளவில் குடாநாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகள் இடம்பெறும் இடங்கள், போக்குவரத்து பாதையென்பவற்றில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிறிய இடைவெளியில் வீதியின் இருமருங்கிலும் நேற்று மதியம் முதல் இராணுவத்தினரின் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதுதவிர, ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வு பகுதிகள் முழுமையாக இராணுவத்தின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை அண்மித்த வீதிகள், குச்சொழுங்கைகள் எல்லாம் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், ஜனாதிபதி கொலை சதி முயற்சி தகவல்களின் பின்னர் இந்த உயர் அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.: