கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி, சனிக்கிழமை டொரோண்டோவில் உள்ள Morning side park ல் இருப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டி...
கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி, சனிக்கிழமை டொரோண்டோவில் உள்ள Morning side park ல் இருப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இரண்டாவது ஒன்றுகூடலும் விளையாட்டு போட்டியும் மிகச்சிறப்பாக நடந்தேறியது.
அங்கு நடந்த நிகழ்வுகளில் பெருவாரியான ஊர் மக்கள் ஆர்வத்துடன் கலந்து ஊர் நினைவுகளை மீட்டு, அங்கு உடன் சமைத்து வழங்கபட்ட காலை உணவு, கூழ், பனங்காய் பணியாரம், மதிய உணவுகள், சிறப்பு உணவுகள் மற்றும் யாழ்ப்பாண பழங்கள் போன்றவற்றை உண்டு மகிழ்ந்தார்கள். சிறுவர்கள்/ சிறுமிகள் மிக உற்சாகமாக உறவுகளை கண்டு மகிழ்ந்தது மட்டுமல்லாது விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
மேலும் அங்கு நடந்த முட்டி உடைத்தல், சங்கீத கதிரை போன்றவை ஊர் உறவுகளை இன்னும் உற்சாகப்படுத்தி மகிழ்வை கூட்டியது. இந்த நிகழ்வானது மக்களுடைய பெரும் ஆதரவுடனும் பங்களிப்புடனும் இனிதாக நடந்து முடிந்தது.
அங்கு நடந்த நிகழ்வுகளில் பெருவாரியான ஊர் மக்கள் ஆர்வத்துடன் கலந்து ஊர் நினைவுகளை மீட்டு, அங்கு உடன் சமைத்து வழங்கபட்ட காலை உணவு, கூழ், பனங்காய் பணியாரம், மதிய உணவுகள், சிறப்பு உணவுகள் மற்றும் யாழ்ப்பாண பழங்கள் போன்றவற்றை உண்டு மகிழ்ந்தார்கள். சிறுவர்கள்/ சிறுமிகள் மிக உற்சாகமாக உறவுகளை கண்டு மகிழ்ந்தது மட்டுமல்லாது விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
மேலும் அங்கு நடந்த முட்டி உடைத்தல், சங்கீத கதிரை போன்றவை ஊர் உறவுகளை இன்னும் உற்சாகப்படுத்தி மகிழ்வை கூட்டியது. இந்த நிகழ்வானது மக்களுடைய பெரும் ஆதரவுடனும் பங்களிப்புடனும் இனிதாக நடந்து முடிந்தது.