மட்டக்களப்பு கள்வியம்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள சீயோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் உடலை அகற்றக் கோரி, மட்டக்கள...
மட்டக்களப்பு கள்வியம்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள சீயோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் உடலை அகற்றக் கோரி, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன்.

நேற்று முன்தினம் இந்து மயானத்தில் இந்த மனித எச்சம் புதைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நடந்த போராட்டத்தை பொலிசார் தடியடி நடத்தி கலைத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, இன்று மாவட்ட செயலகத்தின் முன்பாக வியாழேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காலையிலிருந்து இந்த போராட்டம் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் இந்து மயானத்தில் இந்த மனித எச்சம் புதைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நடந்த போராட்டத்தை பொலிசார் தடியடி நடத்தி கலைத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, இன்று மாவட்ட செயலகத்தின் முன்பாக வியாழேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காலையிலிருந்து இந்த போராட்டம் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.