பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பளை வைத்திய அதிகாரி உள்ளிட்ட ஏழு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், பிரமுகர் படுகொலை சதி தொடர்பான ...
பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பளை வைத்திய அதிகாரி உள்ளிட்ட ஏழு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், பிரமுகர் படுகொலை சதி தொடர்பான தகவல்களை வெளியிட்டதாக வெளியான செய்திகளைளில் உண்மையில்லையென பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர மறுத்துள்ளார்.
பளை வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி சி.சிவரூபன் அண்மையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் ஆறு பேர் கைதாகியிருந்தனர்.
அத்துடன், ஏகே ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் பொலிசார் மீட்டதாக குறிப்பிட்டனர்.
சின்னாமணி தனேஷ்வரன், ரத்னம் கிருஷ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னதுரை, வினயகமூர்த்தி நெஜிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படடு வந்தனர். இந்த நிலையில் நேற்று (28) டி.எம். நிமலராஜ் மற்றும் ரூபன் ஜதுசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஏழு சந்தேக நபர்களையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரித்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக், டக்ளஸ் தேவானந்தா, கருணா ஆகியோரின் படுகொலை சதி குறித்து அவர்கள் எந்த தகவலையும் வெளியிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.

பளை வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி சி.சிவரூபன் அண்மையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் ஆறு பேர் கைதாகியிருந்தனர்.
அத்துடன், ஏகே ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் பொலிசார் மீட்டதாக குறிப்பிட்டனர்.
சின்னாமணி தனேஷ்வரன், ரத்னம் கிருஷ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னதுரை, வினயகமூர்த்தி நெஜிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படடு வந்தனர். இந்த நிலையில் நேற்று (28) டி.எம். நிமலராஜ் மற்றும் ரூபன் ஜதுசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஏழு சந்தேக நபர்களையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரித்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக், டக்ளஸ் தேவானந்தா, கருணா ஆகியோரின் படுகொலை சதி குறித்து அவர்கள் எந்த தகவலையும் வெளியிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.