ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட சஜித் பிரேமதாசாவுக்கு போதுமான தகுதி உண்டு. மக்களிற்காக எப்படி வேலை செய்வதென்றும் அவருக்கு தெரியும்....
ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட சஜித் பிரேமதாசாவுக்கு போதுமான தகுதி உண்டு. மக்களிற்காக எப்படி வேலை செய்வதென்றும் அவருக்கு தெரியும். அதை செய்ய அவருக்கு வாய்ப்பளிக்காவிட்டால், நான் அரசியலை விட்டு வெளியேறி அடுத்த ஐந்து ஆண்டுகளிற்கு வீட்டில் இருக்கப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ.
போகம்பர மைதானத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை தொடக்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
“சஜித் பிரேமதாசவுக்கு 27 வருட அரசியல் அனுபவம் உண்டு. இப்போது அவருக்கு 52 வயதாகிறது. அவருக்கு சேவை செய்ய அதிக காலம் உள்ளது. தற்போதைய தலைவர்கள் 70, 75 மற்றும் 80 வயதுடையவர்கள் என்பதால் சஜித் பிரேமதாச குறைந்தது 20 வருடங்களாவது அரசியலில் இருக்க முடியும்.
பிரேமதாச ஒரு தீவிர அரசியல்வாதி. அவர் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து தனக்குத் தேவையானவர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் செய்வார். அவர் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குவதில்லை. அரசியலுக்காகவே வாழ்கிறார்.
குடும்பம் இல்லாமல் அரசியலில் ஈடுபட்டுள்ள சஜித் பிரேமதாசா மக்கள் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவர். சஜித் ஆதரவு பேரணி அடுத்ததாக கம்பஹாவிலும் நடைபெறும்“ என்றும் தெரிவித்தார்.

போகம்பர மைதானத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை தொடக்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
“சஜித் பிரேமதாசவுக்கு 27 வருட அரசியல் அனுபவம் உண்டு. இப்போது அவருக்கு 52 வயதாகிறது. அவருக்கு சேவை செய்ய அதிக காலம் உள்ளது. தற்போதைய தலைவர்கள் 70, 75 மற்றும் 80 வயதுடையவர்கள் என்பதால் சஜித் பிரேமதாச குறைந்தது 20 வருடங்களாவது அரசியலில் இருக்க முடியும்.
பிரேமதாச ஒரு தீவிர அரசியல்வாதி. அவர் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து தனக்குத் தேவையானவர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் செய்வார். அவர் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குவதில்லை. அரசியலுக்காகவே வாழ்கிறார்.
குடும்பம் இல்லாமல் அரசியலில் ஈடுபட்டுள்ள சஜித் பிரேமதாசா மக்கள் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவர். சஜித் ஆதரவு பேரணி அடுத்ததாக கம்பஹாவிலும் நடைபெறும்“ என்றும் தெரிவித்தார்.