வடக்கு சுகாதார தொண்டர்கள் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில், சிலர் தமக்குத்தாமே மண்ணெணய் ஊற்ற...
வடக்கு சுகாதார தொண்டர்கள் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில், சிலர் தமக்குத்தாமே மண்ணெணய் ஊற்றி தீமூட்ட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களுடன் தமிழ் அரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா பேச்சு நடத்திக் கொண்டிருந்தபோது, இந்த பரபரப்பு சம்பவம் இடம்பெற்றது.
சாவகச்சேரி நகரசபைக்கு முன்பாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. அந்த பகுதி பெரும் கொந்தளிப்பான நிலையில் உள்ளதாக அங்குள்ள yarlexpress செய்தியாளர் குறிப்பிட்டார்.

வடக்கு சுகாதார தொண்டர்கள் நியமனத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, நீண்டகாலமாக சேவையாற்றிய தொண்டர்கள் நேற்று காலை தொடக்கம் யாழ் கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆளுனரை சந்திப்பதற்கு அவர்கள் கோரிக்கை விடுத்தபோதும், ஆளுனர் அந்த கோரிக்கையை கணக்கிலெடுக்காமல் உள்ளார்.
இந்த நிலையில் இன்று சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் தெரிவுசெய்யப்பட்ட சுகாதார தொண்டர்களிற்கு நியமனம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலையிலேயே அங்கு சென்ற, நியமனம் கிடைக்காத தொண்டர்கள் வாசலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மண்டபத்தின் கதவுகளையும் பூட்டினர்.
இதேவேளை, நியமனம் வழங்கப்படுபவர்களும் அங்கு வந்துள்ளனர்.
இதனால் சச்சரவான நிலைமை அங்கு ஏற்பட்டது.
இதேவேளை, போராட்டக்காரர்களை சந்தித்து கலந்துரையாட தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அங்கு வந்திருந்தார். அவர் பேச்சு நடத்திக் கொண்டிருந்தபோது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் தமக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட மூயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மற்றவர்களை அவர்களை தடுத்து விட்டனர்.
தொடர்ந்தும் அந்த பகுதி கொந்தளிப்பாக காணப்படுகிறது.
சாவகச்சேரி நகரசபைக்கு முன்பாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. அந்த பகுதி பெரும் கொந்தளிப்பான நிலையில் உள்ளதாக அங்குள்ள yarlexpress செய்தியாளர் குறிப்பிட்டார்.
வடக்கு சுகாதார தொண்டர்கள் நியமனத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, நீண்டகாலமாக சேவையாற்றிய தொண்டர்கள் நேற்று காலை தொடக்கம் யாழ் கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆளுனரை சந்திப்பதற்கு அவர்கள் கோரிக்கை விடுத்தபோதும், ஆளுனர் அந்த கோரிக்கையை கணக்கிலெடுக்காமல் உள்ளார்.
இந்த நிலையில் இன்று சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் தெரிவுசெய்யப்பட்ட சுகாதார தொண்டர்களிற்கு நியமனம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலையிலேயே அங்கு சென்ற, நியமனம் கிடைக்காத தொண்டர்கள் வாசலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மண்டபத்தின் கதவுகளையும் பூட்டினர்.
இதேவேளை, நியமனம் வழங்கப்படுபவர்களும் அங்கு வந்துள்ளனர்.
இதனால் சச்சரவான நிலைமை அங்கு ஏற்பட்டது.
இதேவேளை, போராட்டக்காரர்களை சந்தித்து கலந்துரையாட தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அங்கு வந்திருந்தார். அவர் பேச்சு நடத்திக் கொண்டிருந்தபோது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் தமக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட மூயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மற்றவர்களை அவர்களை தடுத்து விட்டனர்.
தொடர்ந்தும் அந்த பகுதி கொந்தளிப்பாக காணப்படுகிறது.